தாராபுரம், பிப்.5- தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் கனரா வங்கி கிளையில் சினிமா பாணியில் துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி யில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள அலங்கியத்தில் கனரா வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சனியன்று காலை 11 மணியளவில் கருப்பு நிற பர்தா அணிந்து, கை துப்பாக்கி மற்றும் டைம்பாம் எடுத்துக்கொண்டு கனரா வங்கிக் குள் நுழைந்த இளைஞர் வங்கி மேலாளரிடம், பாம் வெடிக்க வைப்பதாக கூறி கொள்ளைய டிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இத னால் அலங்கியம் பகுதியில் பெரும் பதட்ட மான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது வாடிக்கையாளர் ஒருவர் இளைஞரின் தலையில் அடித்து கீழே தள்ளி போது, பொதுமக்கள் வங்கி கொள்ளை ஆசாமியை பிடித்தனர். அதன்பிறகு அலங்கியம் காவல்துறைக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அலங்கியம் போலீசார் வங்கி கொள்ளையனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அலங்கியம் காந்தி நகரில் வசித்து வரும் ஜெயக்குமார் என்பவரது மகன் சுரேஷ் (19) என்பதும், தாராபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இது தொடர்பாக தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் தனராசு மற்றும் ஆய் வாளர் மணிகண்டன் ஆகியோர் சுரேஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் துணிவு படத்தை பார்த்து அதில் அஜித் வங்கியை கொள்டையடிப்பதை போல தானும் கொள் ளையடிக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், டம்மி கை துப்பாக்கி, டம்மி டைம் பாம், கத்தி மற்றும் கருப்புநிற பர்தா ஆகிய வற்றை அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் மூலமாக வாங்கியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் சுரேஷை தாராபுரம் நீதிமன்றத்தில் முன் நிறுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார்.