பொள்ளாச்சி, பிப்.7- பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே ரேசன் அரிசி கடத்திய இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்த னர். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை பொள்ளாச்சி ஆய்வாளர் கோபிநாத் உத்தரவின் பேரில், சார்பு ஆய்வாளர்கள் தியாகராஜன், பாரத நேரு ஆகியோர் ஆனைமலை அருகே கிழவன்புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் மூட்டைகளுடன் வந்த நபரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், அவர் கேரள மாநிலம், இடுக்கி பாறையை சேர்ந்த மைக்கேல் ராஜ் என்பதும், 1050 கிலோ ரேசன் அரிசியை கேரளத்திற்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த அதிகாரி கள், இரு சக்கர வாகனம் மற்றும் கடத்தி வரப்பட்ட ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதேபோல், நடுப்புனி பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், 50 கிலோ கொண்ட 12 மூட்டைகளில் ரேசன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அரிசியை கடத்திய மாப்பிள்ளை கவுண்டர் புதூரைச் சேர்ந்த விஜயன் என்பவரை கைது செய்து, காரையும் அரிசியை பறிமுதல் செய்தனர்.