districts

img

அத்திக்கடவு-அவிநாசி குடிநீர் குழாய் உடைப்பு

கோவை, ஜூன் 9- கோவை அருகில் அத்திக்கடவு-அவிநாசி  குடிநீர் குழாய் உடைந்ததால், சாலையில் குடிநீர் பீய்ச்சியடித்து வந்தது. குடிநீர் பற் றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், வீணாக  குடிநீர் சாலையில் வெள்ளம்போல் செல் வது பொதுமக்களை கவலையடையச் செய்துள்ளது.  கோவை, பெரியநாயக்கன்பாளையம் - மேட்டுப்பாளையம் சாலை பெரிய பாலம்  அருகே  கட்டுமான பணிகள் நடைபெற்று வரு கிறது. இப்பணியின் போது கனரக கிரேன்கள்  மற்றும் பெரிய பில்லர்கள் அமைப்பதற்காக பொக்லைன் பயன்படுத்தப்படுகிறது. இதில் , பொக்லைன் குழி தோண்டிய போது அத்திக் கடவு-அவிநாசி குடிநீர் விநியோக பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடி நீர் சாலையில் வெள்ளம் போல் சென்று வீணாகி வருகிறது. கோடைகாலத்தில் அணைகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் அணை யில் குறைவான குடிநீர் உள்ளது. இந்நிலை யில், பிரதான குழாய் சேதத்தால் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து, தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியம் சம்பவ இடத்திற்கு சென்று  உடைந்த குழாயை சரிசெய்யும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளனர்.  இதுபோன்ற கட்டுமான பணிகள் நடை பெறும் போது, குடிநீர் குழாய்கள் சேதம டையாமல் இருக்க குடிநீர் வடிகால் வாரி யத்தின் ஆலோசனைகளை பெற்று பணி களை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.