districts

img

நாய்கள் கடித்து 15 ஆடுகள் பலி?

நாமக்கல், ஜன. 16- பரமத்தி வேலூர் ஜேடர்பாளையத்தில், 15  ஆடுகளை கடித்துக் கொன்ற அடையாளம் தெரியாத விலங்கு குறித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.   நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா  ஜேடர்பாளையத்தில் வசித்து வருபவர் ராம சாமி.  இவர் ஆடு மாடுகள்  வளர்த்து வருகிறார்.  புதனன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு சரளை  மேட்டில் உள்ள வீட்டுக்கு சென்று உள்ளார்.  வியாழனன்று காலை வந்து பார்த்த பொழுது பட்டியில்  இருந்த 15 ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, ஜேடர்பாளையம் காவல்துறையினருக்கு தகவல்  அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆடுகளை  நாய்கள் கடித்ததா அல்லது அடையாளம் தெரியாத விலங்கு  ஏதேனும் கடித்ததா என விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். இறந்த ஆடுகளின் மதிப்பு ஒரு லட்ச ரூபாய்க்கு  மேல் இருக்கும் என ராமசாமி வேதனையை வெளிப்படுத்தி னார்.