districts

img

கோவில் கமிட்டியில் இணைக்க மறுத்து, இளைஞர் மீது தாக்குதல்

 சேலம், ஏப். 1- தலித் மற்றும் போயர் சமூகத் தினரை கோவில் கமிட்டியில் இணைக்க மறுத்து, கோவில் திரு விழாவில் இளைஞரை தாக்கிய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இச்சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு கண்டனம் தெரி வித்து, உடனடியாக காவல் நிலையம் சென்று தலையீடு செய்தனர்.  சேலம் மாநகரம் எஸ். நாட்டா மங்கலம் அருகிலுள்ள மாதேஸ் வரன் காடு பகுதியில் உள்ள மாரியம்மன் காளியம்மன் முனி யப்பன் கோவில் திருவிழா கடந்த  10 நாட்களாக நடைபெற்று வரு கிறது.  7 சமூகத்தினர் சேர்ந்து கொண் டாட வேண்டிய இந்த திருவிழா வில், 5 சமூகத்தினர் மட்டும் கோவில்  கமிட்டியினராக செயல்பட்டு வரு கின்றனர். தலித் மற்றும் போயர் சமூகத்தினர் கோவில் கமிட்டியில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.

இப்படி பிரச்சனை இருக்கும் போது, கடந்த வியாழக்கிழமை திருவிழா தேர் பவனி நடை பெறும் பொழுது, பூபதி என்ப வரை அடித்து இருட்டு பகுதியில்  தூக்கிச் சென்று கண்மூடித்த னமான தாக்குதலில் அதே பகுதி யை சேர்ந்த வேலு, குள்ளு என்கிற  மணிகண்டன், சிவா ஆகியோர் தாக்குதல் நடத்தியுள்ளனர், மேலும், கோவில் கமிட்டியில் உங்கள் சமூகத்தினரை இணைக்க  நீ முயற்சி செய்கிறாய் அது நடக் காது என தாக்குதல் நடத்தும்போது  தெரிவித்துள்ளனர். இச்சம்ப வத்தை அறிந்தவுடன் மார்க்சிஸ்ட் கட்சி உடனடியாக தலையீடு செய் துள்ளது.  இச்சம்பவம் தொடர்பாக, சிபிஎம் சேலம் மாவட்ட செயலாளர்  மேவை. சண்முகராஜா, தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆர்.குழந்தைவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி மாவட்ட குழு உறுப் பினர் ஜி.கவிதா உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பூபதி மற்றும் அப் பகுதி பொதுமக்கள் சிலருடன்  மார்க்சிஸ்ட் கட்சியை பனமரத்துப் பட்டி ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமையில், கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித் தனர். இதன்பேரில், முதற்கட்ட மாக சிஎஸ்ஆர் நகல் வழங்கப்பட் டுள்ளது. மேலும், தாக்குதல் நடத்தி யவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆய்வா ளர் உறுதியளித்தார்.  மேலும், ஊருக்கு பொதுவான கோவிலாக உள்ளதால் அனைத்து  சமூகத்தினரும் கோவில் கமிட்டி யில் இணைந்து செயல்பட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.