districts

img

காலிக்குடங்களுடன் மக்கள் மறியல்

ஈரோடு, செப்.14- கோபிசெட்டிபாளையம் அருகே முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுவலூர் அருகே எலந்தகாடு என்ற  கிராமம் உள்ளது. இங்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி செய்து தருவதற்காக குழாய் அமைக்கப்பட்டது. இந் நிலையில், குடிநீர் குழாய்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு  உடைந்து விட்டது. இதனால் இப்பகுதியில் கடந்த சில  நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிறுவலூர் ஊராட்சி  நிர்வாகத்திடம் புகாரளித்தனர். ஆனால், இதுகுறித்து எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படு கிறது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் வியாழனன்று காலை காலிக்குடங்களுடன் சிறுவலூர் – கவுந்தபாடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரி கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறையாக குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை யேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.  இதனால் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்கு வரத்து சீரானது.