districts

img

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி முதல்வர்

சேலம், மார்ச் 8- பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சேலம் சௌடேஸ்வரி கல்லூரி முதல்வரை கைது செய்ய வலியு றுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாதர், வாலிபர், மாணவர் சங்கத்தி னரை போலீசார் கைது செய்த சம் பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாநகரம் கொண்ட லாம்பட்டி அருகில் செயல்படும் சௌடேஸ்வரி கல்லூரி முதல்வ ராக பாலாஜி என்பவர் 2014 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இந்நிலையில், கல்லூரி முதல்வர் பாலாஜி கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் பாலி யல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச் சாட்டு எழுந்தது. இது தொடர்பாக புகார் தெரிவித்தும், எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி ஆசிரியைகள் மாண விகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, கல்லூரி முதல்வரின் ஒழுங்கீன செயல்கள் குறித்து பிப்ரவரி 27ஆம் தேதி  கல்லூரி கல்வி இணை இயக்குனர்  தலைமையில் ஆய்வு மேற்கொள் ளப்பட்டு, பாலாஜி மீதான குற்றச் சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட தாக கூறப்படுகிறது. இதனைத்தொ டர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட் டுள்ளார். பாலாஜி மீண்டும் கல்லூ ரிக்கு வந்ததையடுத்து, ஆவேச மடைந்த மாணவிகள், ஆசிரியர் கள் மீண்டும் போராட்டத்தை முன் னெடுத்தனர்.  இந்நிலையில், கல்லூரி முதல்வர் பாலாஜியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தும், உடனடி யாக கைது செய்யப்பட வேண்டும்  என மார்க்சிஸ்ட் கட்சி, மாதர் சங்கம்,  மாணவர் சங்கம், வாலிபர் சங்கம் வலியுறுத்தி வந்தது. இதன்தொடர்ச்சியாக, பாலா ஜியை உடனடியாக கைது செய்ய  வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர்  சங்கம், அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்பி னர் சேலம் கோட்டை மைதானத்தில்  வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீ சார் அனுமதி மறுத்து, போராட் டத்தை கலைக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கம் எழுப்பியபோது, அனை வரையும் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இச்சம் பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மாதர் சங்கத்தின்  மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஞான சௌந்தரி செய்தியாளர்களிடம் பேசுகையில், மார்ச் 8 உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டா டப்பட்டு வரும் நிலையில், சேலம்  சௌடேஸ்வரி கல்லூரி ஆசிரியை கள் மற்றும் மாணவிகளிடம் பாலி யல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி  முதல்வர் பாலாஜியை காவல் துறையினர் கைது செய்ய வேண் டும் என்ற ஒற்றைக் கோரிக்கைக் காக போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், காவல்  துறையினர் அனுமதி இல்லை என  தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெண்களின் பாதுகாப்பிற்காக போராட்டத் தில் ஈடுபட்டவர்களை குண்டுக் கட்டாக தூக்கி சென்று கைது செய் துள்ளது.  மேலும், எப்போது வேண்டுமா னாலும் நாங்கள் அனுமதி மறுப் போம் என காவல் பெண் உதவி ஆய்வாளர் கூறுகிறார். சேலம் சௌடேஸ்வரி கல்லூரியின் முதல் வர் கைது செய்யும் வரை போராட் டம் தொடரும். பெண்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறையினர் இப்படி நடந்து  கொண்டிருப்பது மகளிர் தினத்தில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது, என்றார். முன்னதாக, மாதர் சங்க மாநி லக்குழு உறுப்பினர் ஐ.ஞான சௌந்தரி தலைமையில் நடை பெற்ற இந்த போராட்டத்தில், மாதர்  சங்க மாவட்டச் செயலாளர் எஸ். எம்.தேவி, ஆர்.வைரமணி, வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் பெரியசாமி, தலைவர் ஜெகநா தன், இந்திய மாணவர் சங்க மாவட்ட  துணைச்செயலாளர் கோகுல், டார்வின் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.