கோவை, நவ.6- திருட்டு மற்றும் வழிப் பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் 114 சவரன் நகை மீட்கப்பட்டது. கோவை மாவட்டத் தில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடு பட்ட நபர்களை கைது செய்யும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்தனர். இதில் சிறப்பாக செயலாற்றிய காவல்துறையின ருக்கு மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பாராட்டுகளை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியா ளர்களை சந்தித்த பத்ரிநாராயணன் கூறுகையில், , சிறுமுகை காவல் நிலைய சரகத்தில் கடந்த வாரம் இரு சக்கர வாகனத்தில் பணத்துடன் வந்த டாஸ்மாக் சூப்பர்வைசர் விஜய் ஆனந்த் என்பவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து வழிப்பறி செய்ய முயற்சி செய்ததில் சிவகங் கையைச் சேர்ந்த ஆகாஷ், லோக நாதன், மனோஜ், பட்டுக்கோட்டை சேர்ந்த ராஜா என்ற ரவிக்கண்ணன் மற்றும் சதீஷ் ஆகியோர்கள் கைது செய்துள்ளனர்.
இதுபோல் சிறுமுகை மற்றும் அன்னூர் பகுதிகளில் 6 வழிப்பறி மற்றும் வழிப்பறி முயற்சி வழக்கு களில் ஈடுபட்டதை கண்டறிந்து அவர் களை தனிப்படையினர் கைது செய்த னர். அவர்களிடமிருந்து சுமார் 14 ½ பவுன் தங்க நகைகளை மீட்கப்பட் டுள்ளன. அதேபோல் காரமடை மற் றும் பொள்ளாச்சி பகுதிகளில் வீட் டின் பூட்டை உடைத்து திருடிய மூன்று வழக்குகளில் ஈடுபட்ட திருநெல் வேலியைச் சுரேஷ் (எ) சூட்டு சுரேஷ், தென்காசியைச் சேர்ந்த மருதராஜ் (எ) சப்ஜெயில் ராஜா, தூத்துக்குடி யைச் சேர்ந்த செந்தில் மருதுபாண்டி (எ) மருது ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 72 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 இரு சக்கர வாகனத்தையும் மீட்டனர். மேலும், கோவில்பாளையம் பகு திகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மூன்று வழக்குகளில் ஈடு பட்ட நீலகிரி மாவட்டத்தைச் சாலமன் மற்றும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை கைது செய்யப்பட்டு, சுமார் 27 ½ பவுன் தங்க நகைகளை மீட்டனர். மொத்தமாக ஒரே நாளில் வழிப்பறி மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடு பட்ட 10 நபர்களை கைது செய்துள் ளதாகவும் இவர்களிடமிருந்து மொத் தம் 114 சவரன் நகைகள் மீட்கப்பட் டுள்ளதாக தெரிவித்தார். மேலும் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க சிறப்பு தனிப்படை போலீ சார் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் குற்றவாளிகளை கண் காணிக்க துரிதப்படுத்தப்படும் என தெரிவித்தார்.