districts

img

தானியங்கி கேமரா வாயிலாக வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி

பொள்ளாச்சி,டிச.21-  ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில்  தானியங்கி கேமரா மூலம் வன விலங்குகள் கணக்கெடுக்கும்  பணி துவங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்ப கத்துக்கு உட்பட்ட மானாம்பள்ளி. வால்பாறை. பொள்ளாச்சி.  உலாந்தி. ஆகிய நான்கு வனச்சரங்களில் தானியங்கி கேமரா  வாயிலாக வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி துவங்கப் பட்டுள்ளது. இந்த கணக்கெடுக்கும் பணி கடந்த டிசம்பர்  19ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை மொத்தம்  25 நாட்களுக்கு நடைபெற உள்ளது பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட நான்கு வனச் சரகங்களில் 588 தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பில் வாரம் ஒரு முறை கேமராவில் பொருத்தப்பட்டுள்ள எஸ்டி  கார்டு மாற்றி அமைக்கப்பட்டு பதிவாகியுள்ள வனவிலங்கு களை கணக்கெடுக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.