திருப்பூர், ஜூன் 14 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக அதிக முறை ரத்த தானம் வழங்கியதற்காக உலக குருதி கொடையாளர் தினத்தன்று, திருப்பூர் தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் கார்த்திக் (64 முறை), மாவட்ட குழு உறுப்பினர் பிரவீன் (21முறை) ஆகியோருக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் முதல்வர் முருகேசன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் கு.பாலமுரளி, வடக்கு மாநகர கமிட்டி உறுப்பினர் சுபாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.