பள்ளிபாளையம், டிச.24- அரசு மருத்துவமனையில் மருத்துவரை நியமித்து, அடிப் படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று பள்ளிபாளையம் ஆவரங்காடு எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பள்ளிபாளையம் 16,17ஆவது வார்டு கிளைகள் சார்பாக, பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு, கிளை செயலாளர் ஜி. பெருமாள் தலைமை வகித்தார். இதில், பள்ளிபாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்ப னையை தடுத்து நிறுத்த வேண்டும். ஆவரங்காடு அரசு மருத்துவ மனையில், உயிர்காக்கும் மருந்து கள், அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, கூடுதல் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், மருந்து கொடுப்பவர் போன்றவர்களை நியமித்து, கூடுதல் வசதிகளை செய்து தர வேண்டும். அரசு கிருஷ்ணவேணி பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவரை உயர்த்தி கட்டி கண்காணிப்பு கேமரா வசதி செய்து கொடுக்க வேண்டும். 17ஆவது வார்டு பகுதியில் 30 ஆண்டுகளாக உள்ள சாக்கடை கால்வாய் அகற்றி, புதிய சாக் கடைக் கால்வாய் அமைத்துக் கொடுக்க வேண்டும். பள்ளி பாளையம் காவல் நிலையத்தில் கூடுதல் காவலர்களை பணிய மர்த்தி, வாகன திருட்டு, பணம், நகை திருட்டு உள்ளிட்டவைகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி, விசைத்தறி சங்க ஒன்றிய செயலாளர் எஸ். முத்துக்குமார், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எம்.லட்சுமணன், ஒன்றிய செயலாளர் எம்.நவீன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் இ. கோவிந்தராஜ் மற்றும் எம்.சரவணன், ஆர்.சங்கர், ஆர்.ரங்க ராஜ், ஏ.அசன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.