திருப்பூர், நவ.13- தங்களுக்கென்று ஒதுக்கீடு செய் யப்பட்ட இலவச வீட்டு மனைப் பட் டாவை வழங்க வலியுறுத்தி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் எல்லப்பாளையம்புதூர் ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர். காங்கயம் தாலுகா, எல்லப்பாளை யம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளக் காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 20 பெண்கள் செய்தித்துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதனை சந்தித்து, கோரிக்கை மனு கொடுத்தனர். இம்மனுவில், புள் ளக்காளிபாளையம் பகுதியில் 20 குடும் பங்கள் சொந்த வீடு இல்லாமல், கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருகிறோம். நாங் கள் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு 6 ஆண்டுகள் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம். இது குறித்து ஆதிதிராவிட நலத்துறை, ஊராட்சி நிர்வாக அதிகாரி கள் உள்ளிட்டோர் கள ஆய்வு செய்து, மேற்கண்ட 20 குடும்பங்களுக்கு இல வச வீட்டு மனைப் பட்டா வழங்கலாம் என விசாரணையில் உறுதி செய்தனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காங்கயம் வட்டாட்சியர் என, தொடர்ந்து 6 ஆண்டுகள் மனுக்கள் கொடுத்தும், தற்போது வரை எங்க ளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை. எனவே, சொந்த வீடோ அல்லது வீட்டுமனைப் பட்டாவோ இல் லாமல் வசித்து வரும் எங்களுக்கு, இல வச வீட்டு மனைப் பட்டா வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும், என கேட் டுக் கொண்டுள்ளனர். மனு கொடுக்கும் பெண்களோடு உடனிருந்த ஆதித் தமிழர் ஜனநாயகப் பேரவையின் நிறுவ னத் தலைவர் அ.சு.பவுத்தன் கூறிய போது, மனு கொடுத்துள்ள 20 குடும்பங் களுக்கு காங்கயம் அருகே, வட சின்னா ரிபாளையம் ஊராட்சியில் நிலம் ஒதுக் கீடு செய்யப்பட்டு, இலவச வீட்டும னைப் பட்டா வழங்கப்படும் என அறிவிக் கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது கொரோனா தொற்று துவங்கியதால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்னர் இதுவரை ஆதிதிரா விடர் நலத்துறை தனி வட்டாட்சியர் 3 பேர் மாறி, தற்போது 4 அதிகாரி பதவி வகித்த பின்பும், இவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா கிடைக்கவில்லை. தற்போது வேறு இடத்தில் உங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா தருகிறோம் எனக் கூறி, திரும்பவும் முதலில் இருந்தே ஆதார் கார்டு, வசிப்பிடச் சான்று, நியாய விலை கடை அட்டை உள்ளிட்ட பல் வேறு ஆவணங்களை திரும்பவும் கொடுத்து மனு கொடுக்குமாறு அதிகா ரிகள் வலியுறுத்தி வருகின்றனர். எனவே, மேற்கொண்டு 20 குடும்பங்க ளுக்கு காலதாமதம் செய்யாமல், இல வச வீட்டு மனைப் பட்டா வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என, செய்தித் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத் துள்ளோம், என்றார்.