districts

img

யமஹா நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கு: சிஐடியு ஆர்ப்பாட்டம்

சேலம், அக்.20- தொழிலாளர்களின் உரிமைகளை மறுத்து தொழிலாளர் விரோத போக்குடன் செயல்படும் யமாஹா நிறுவத்தின் நடவ டிக்கையை கண்டித்து சேலத்தில் சிஐடியு வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போட்டி சங்கம் வைத்து யமஹா நிறுவ னத்தின் தொழிலாளர் விரோத போக்குடன் செயல்பட்டு வரும் நிலையில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலா ளர்களுக்கு ஆதரவாகவும் யமஹா நிறுவ னத்தை கண்டித்தும் இந்திய தொழிற்சங்க மையத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. யமஹா தொழிற்சாலையில் தொழிலா ளர்களுக்கு எதிராக நிர்வாகம் போட்டி  சங்கம் வைத்து தொழிலாளர் பிரச்சனை களுக்கு தீர்வு காணாமல் மோசடி வேலையில்  ஈடுபட்டதை கண்டித்து தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர். நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கியும் புதிய நிர்வாகிகளை ஏற்க மறுத்து அவர் களுடன் தொழிலாளர் பிரச்சனை சம்பந்த மாக யமஹா நிறுவனம் பேச மறுத்து வரு கிறது. எனவே, தொழிலாளர் விரோத போக்கில் ஈடுபடும் யமஹா நிறுவனத்தை கண்டித்து சேலம் ஜங்ஷன் தலைமை தபால்  நிலையம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் டி.உதயகுமார் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் ஏ. கோவிந்தன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி, பி.பன்னீர்செல்வம் உட்பட திரளான தொழிலாளர்கள் கலந்து கொண் டனர்.