திருப்பூர், ஜன.24- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செவ்வாயன்று மாணவர்களிடம் பெருமாநல்லூர் காவல்துறையினர் புகையி லைக்கு எதிரான விழிப்புணர்வு செய்தனர். திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் பெருமாநல்லூர் காவல்துறையினர் புகை யிலைக்கு எதிரான விழிப்புணர்வு, அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள், அவர்களது பணிகள் குறித்து மாணவர்களுடன் ஒரு விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினர். அவர்கள் கேட்ட வினாக்களுக்கு ஆர்வத் துடன் விடை அளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி னர். இந்நிகழ்வில் ஆய்வாளர் ஹேமலதா, துணை ஆய்வா ளர் உமா மகேஸ்வரி, பயிற்சி ஆய்வாளர் பாமா, காவலர் சர வணகுமார், தலைமை ஆசிரியர் விஜய் சித்ரா, ஆசிரியர்கள் புனிதவதி, விஜிலா மேரி இன்பபெல், பிரபா, ரெனிலா தேவி மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.