districts

img

பூங்காவிற்கு தீ வைத்த சமூக விரோதிகள்: சிபிஎம் கண்டனம்

சேலம், ஜூலை 23- சேலத்தில் ஏரிப்பூங்காவிலுள்ள செயற்கை குகைக்கு தீ வைத்த சமூக விரோதிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. சேலம் மாநகரம், பள்ளப்பட்டி ஏரி பூங்காவை சீரமைக்க பல ஆண்டுகளாக வைக்கப்பட்ட கோரிக் கையை தொடர்ந்து, மக்களின் வரிப்பணத்தில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டது. இதற் கான பராமரிப்பு முறையாக இல்லாமல் பல  மாதங்களாக திறந்தவெளி மதுக்கூடம் போல  இப்பகுதி காணப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையீடு செய்ததன் விளைவாக, பழுத டைந்த கம்பி வேலிகள் அகற்றப்பட்டு, புதிய வேலி கள் அமைத்து, 8 இடங்களில் கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால், போதுமான காவலர்கள் நியமிக்கப்படவில்லை. தீ தடுப்பு  கருவிகள் ஏதுமில்லை. அதிகாரிகள் ஆய்வு செய் யவோ, மேற்பார்வையிடவோ வருவதில்லை. இப் படி முறையான கண்காணிப்பு இல்லாததால், மாந கராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளின் அலட் சியத்தால் மீண்டும் ஏரி பூங்கா சமூக விரோதி களின் கூடாரமாக மாறியது. இந்நிலையில், திங்களன்று ஏரி பூங்காவில் சிலர் கஞ்சா புகைத்துவிட்டு, போதையில் தீ வைத் ததன் விளைவால் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பி லான சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட சாதனங் கள் அனைத்தும் தீக்கிரையாகிவிட்டன. இது  முழுக்க முழுக்க மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் தான் நடந்துள்ளது. இதன்பிறகாவது ஏரி பூங்காவை முறையாக பரா மரிக்க அதிகாரிகள் கவனம் செலுத்துவதோடு, அங்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும். மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிர வீன்குமார் வலியுறுத்தியுள்ளார்.