districts

img

அரசுப் பள்ளிக்குள் புகுந்து சமூக விரோதிகள் அட்டகாசம்

நாமக்கல், செப்.3-  விடுமுறை நாளில் மல்லசமுத்தி ரம் அரசு பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த சமூக விரோதிகள், மது அருந்திவிட்டு, மின்விசிறி, நாற் காலி உள்ளிட்ட பொருட்களை சூறையாடி சென்ற சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டம், மல்ல சமுத்திரத்தில் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகி றது. 800க்கும் மேற்பட்ட மாணவி கள் படித்து வருகின்றனர். கடந்த 30  ஆம் தேதி மாணவிகள் வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பினர். விடுமுறை முடிந்து  திங்களன்று பள்ளிக்கு வந்த மாண விகள், தங்களது வகுப்பறைக ளில் உள்ள மின்விசிறி, சேர், டேபிள் மற்றும் புத்தகங்கள் சூறையாடப் பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த னர். ஏழு வகுப்பறைகளை சமூக  விரோதிகள் சூறையாடிச் சென்றுள் ளனர். மேலும், வகுப்பறைக்குள் மதுபாட்டில்கள், சிகரெட், உணவு பார்சல்களை போட்டுவிட்டு சென் றுள்ளனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை சுமதி, நாமக்கல் மாவட்ட கல்வி அதிகாரி விஜயன் மற்றும் மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற் கொண்டு வழக்கு பதிவு செய்த னர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், பள்ளிக்கு காவலா ளியை நியமிக்க வேண்டும், சிசி டிவி கேமராக்கள் அமைக்க வேண் டும். மது அருந்திவிட்டு போதை யில் பொருட்களை உடைத்துச் சென்றுள்ள நபர்களை கண்டறிந்து  கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தினர். இந்திய மாணவர் சங்கம் கண்டனம் இதேபோன்று, நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி டவுன் பஞ் சாயத்து 6ஆவது வார்டு அம்பேத் கர் பகுதியில் அரசு துவக்கப் பள்ளிக்குள் புகுந்த சமூக விரோதி கள், பள்ளியின் சுவற்றில் சமைய லறை உள்ளிட்ட இடங்களில் மனி தக் கழிவால் ஆபாச வார்த்தைகள் எழுதப்பட்டு, பூட்டில் மனித கழிவு பூசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசுப்பள்ளிக்குள் புகுந்து சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாண வர் சங்க நாமக்கல் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து இச்சங்கத்தின்  சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக் கையில், இப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்தும், பள்ளிக்கு காவலர்கள் இல்லாமலும் உள்ளது. மாவட்ட  நிர்வாகமும், பள்ளி கல்வித்துறை யும் பள்ளியின் சுற்றுச்சுவர்  இடிந்த நிலையில் உள்ளதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.  இதற்கு மேல் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். முன்னதாக, சம்பந்தப் பட்ட பள்ளியில் இந்திய மாண வர் சங்க நாமக்கல் மாவட்டத் தலை வர் தங்கராஜ், ஒன்றியச் செயலா ளர் தனுஷ், துணைத்தலைவர் ராகுல் உள்ளிட்ட மாணவர் சங்க நிர்வாகிகள் பள்ளியில் ஆய்வு மேற் கொண்டனர்.  இப்பள்ளி குறித்து அருகில் உள்ள பொதுமக்களிடம் விசாரிக் கும் போது இந்த ஊர்களில் உள்ள சில இளைஞர்கள்  பள்ளி விடுமுறை நாட்களிலும் பள்ளி முடிந்த இரவு நேரங்களிலும் கஞ்சா உள்ளிட்ட  போதைப் பொருட்கள் பயன்படுத் துவதற்கும் இப்பள்ளியை பயன் படுத்தி வருகின்றனர் என கூறியுள் ளனர். இந்த எருமப்பட்டி பகுதிக ளில் கஞ்சா விற்பனை சந்து கடை கள் அதிகளவு நடைமுறையில் உள் ளதை கண்டித்து ஜனநாயக அமைப்புகள் ஏற்கனவே பல  போராட்டங்கள் நடத்தி உள்ளனர்.  எனவே மாவட்ட காவல்துறை யினர் உடனடியாக விசாரணை மேற் கொண்டு சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என வலியு றுத்தியுள்ளனர்.