districts

img

ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை அம்பலப்படுத்தி சிஐடியு, விச, விதொச நடைபயணம்

கோவை, மார்ச் 1- ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவ டிக்கையை கண்டித்தும், ஏப்ரல் 5ஆம்தேதி நாடாளுமன்றம் நோக்கி லட்சக்கணக்கான உழைப்பாளி மக்கள் பங்கேற்க இருக்கிற இயக்கத்தை பிரச்சாரம் செய்தும், கோவை யில், சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவ சாய தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு  பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டனர்.  இதில் பொள்ளாச்சி, ஆனைமலை குழுக் கள் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனைமலை காளியாபுரம் பிரிவில் துவங் கிய இயக்கத்திற்கு விதொச மாவட்ட செய லாளர் வி.துரைசாமி தலைமை தாங்கினார்.  இதில், விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர் வாகி எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்ட செய லாளர் வி.ஆர்.பழனிச்சாமி, சிஐடியு எம். பரமசிவம் உள்ளிட்ட தலைவர்கள் பங் கேற்று உரையாற்றினர்.  இதேபோன்று, சிஐடியு இன்ஜினியரிங் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இயக்கம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் துடியலூர் பகுதியில் நடைபெற்றது. இதில்,  சிஐடியு மாவட்ட துணை தலைவர் ஆர்.கேசவ மணி தலைமை தாங்கினார். இதில், இன்ஜினி யரிங் சங்க தலைவர் சுப்பிரமணியம், பொதுச்  செயலாளர் சி.துரைசாமி, பொருளாளர் ஏ.ஜி. சுப்பிரமணியம் உள்ளிட்ட தலைவர்கள் உரை யாற்றினர்.

;