திருப்பூர், ஜூன் 15 – திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வியாழனன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆண்டுதோறும் ஜூன் 15 அன்று மாநில சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத் துறை சார்பில் முதியோருக்கு எதி ரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் அனைத்து கல்லூரிகள், அரசு அலுவல கங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாநகராட்சி வளா கத்தில் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்கு மார் தலைமையில் இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. குறிப்பாக, முதியோர் களை குடும்பத்தில் நல்ல முறையில் அர வணைப்போடு பராமரித்திடுவோம், மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும், காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டோம், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவ தைனை தடுப்போம் என உறுதி ஏற்கப் பட்டது. இந்நிகழ்வில் இரண்டாவது மண் டல தலைவர் ர.கோவிந்தராஜ், துணை ஆணையர்கள் கே.பாலசுப்ரமணியன், அ.சுல்தானா, உதவி ஆணையர், (நிரு வாகம்) சந்தன நாராயணன், உதவி ஆணையர் (பொ) (கணக்கு) தங்க வேல் ராஜன், மாநகராட்சி அலுவலர் கள் உட்பட பலர் உள்ளனர்.