திருப்பூர், ஜன.9- திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் மற்றும் அறிவி யல் கல்லூரியில் புதனன்று போதை ஒழிப்பு விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற் றது. இளைஞர்கள் போதைக்கு அடிமையா வதை தடுக்க வேண்டும். போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் உடல் நலம், மனநலம் ஆகியவை பாதிக்கப்பட்டு எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. போதைப் பொருட்களை உட்கொள்வதால் உடல் உறுப்புகள் செயலிழந்து புற்றுநோய் போன்ற பல நோய்கள் ஏற்படுகிறது. போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட் டெடுப்பது குறித்து திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் போதைக்கு எதிராக முகவர்ணம் பூசியும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.