districts

img

அவிநாசி, காங்கேயத்தில் பட்ஜெட் எதிர்ப்பு பிரச்சார கூட்டம்

திருப்பூர், பிப். 17– மத்திய அரசு தாக்கல் செய்த மக்கள் விரோத பட்ஜெட்டை அம்பலப்படுத்தி காங்கேயம், அவிநாசி பகுதிகளில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி இணைந்து பதினோரு இடங்க ளில் திங்களன்று பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சார இயக்கத்திற்கு மார்க் சிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகா செய லாளர் திருவேங்கடசாமி தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் சி.ரவிச்சந்திரன் ஆகியோர் மத்திய அரசின் நாசகர பட்ஜெட்டை விளக்கி உரையாற்றி னர். மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் குமாரசாமி, வேலுச்சாமி உள் பட மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள்  பங்கேற்றனர்.

அவிநாசி

மத்திய அரசின் மக்கள் விரோத பட் ஜெட்டைக் கண்டித்து சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதியில்  கம்யூனிஸ்ட் கட்சி யின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் எம்.ரவி முன்னிலை வகித்தார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பி.முத்துச்சாமி, எஸ்.வெங்கடாசலம், ஆர்.வேலுச்சாமி, ஏ.ஈஸ்வரமூர்த்தி, ஆர்.பழனிச் சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கள் கே.எம்.இசாக், பி.ராமசாமி, வி.கோபால், வி.கே.சுப்பிரமணியம், எம்.மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், அவிநாசியிலும், திருமுரு கன்பூண்டியிலும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.