districts

img

வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

கோவை, மே 21- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அன்னூர் தாலுகா, கஞ்சப்பள்ளி கிளை மற் றும் சூலூர் தாலுகா, ராசிபாளையம் கிளை கள் சார்பில் ரத்த தான முகாம் நடத்தி, ஒரே நாளில் அரசு மருத்துவமனைகளுக்கு 77 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ரத்தம் தானம் வழங்கி யவர்களுக்கான சிறப்பு விருதுகளை மாவட்ட ஆட்சியரிடமிருந்து இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின்கோவை மாவட்டக்குழு பெற்று வருகிறது. ரத்த தான முகாம்களை நடத்தியும், அவசர தேவைகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நேரடி யாக சென்று வாலிபர் சங்கம் ரத்ததானம் செய்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்கள் கோடைகாலம் என்பதால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை விடப்பட்ட நிலை யில், பெரும் பகுதி மருத்துவமனையில் நோய்களினால் பாதிக்கப்பட்ட நோயாளிக ளுக்கு அவசர தேவைகளுக்கு ரத்தம் தான மாக பெற வாலிபர் சங்கத்தை அணுகுவது வழக்கம். இதனை உணர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் முகாம்களை நடத்தி, மருத்துவமனைக்கு வாலிபர் சங்கம் ரத்ததானம் செய்து வருகிறது. அதனடிப்படையில் கோவை மாவட்டம், அன்னூர் தாலுகா, கஞ்சப்பள்ளி கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை  சார்பில் ஞாயிறன்று ரத்த தான முகாம் நடை பெற்றது. அப்பகுதியிலுள்ள அரசுப்பள்ளி யில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர்  மணிகண் டன், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரி யர் காளியப்பன் ஆகியோர் துவங்கி வைத்த னர். இதில் மாவட்ட செயலாளர் அர்ஜூன், தாலுகா செயலாளர் ரமேஷ், கஞ்சப்பள்ளி கிளை நிர்வாகிகள் லோகநாதன், யுவராஜ் கலந்து கொண்டனர். இம்முகாமின் மூலம் 40 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. அதேபோல, சூலூர் தாலுகாவிற்குட் பட்ட ராசிபாளையம் கிளையின் சார்பில் ஏற் பாடு செய்யப்பட்ட ரத்ததான முகாமினை  வாலிபர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.கார்த் திக் மற்றும் சூலூர் தாலுகா முன்னாள் தலை வர் ஏ.சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்த னர். இதில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா, துணைச்செயலாளர் நித்யஸ்ரீ, துணைத்தலைவர் மணி பாரதி, தாலுகா செயலாளர் ரவிதாஸ், நிர்வாகிகள் தீனதயா ளன், குரு சாரதி, கோகுல கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமின் மூலம் 37 யூனிட் ரத்தம் தானமாக பெற்றப் பட்டது.