districts

ஜாக்டோ – ஜியோ சார்பில் தொடர் போராட்ட அறிவிப்பு

தருமபுரி, அக்.29- அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஆலோசனை கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தார். இதில் ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங் கிணைப்பாளர்கள் பி.எம்.கெளரன், ராசா.ஆனந்தன், கே.பாஸ்கரன், நிதி காப்பாளர் கே.புகழேந்தி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் சாமிநாதன், தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கோ.பழனியம்மாள், பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆசிரியர் சங்க மாவட்டச் செய லாளர் முருகேசன், சத்துணவு ஊழியர் சங்க  மாவட்டத் தலைவர் சி.காவேரி, பொதுநூலகத் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் முனிவராஜ், கல்லூரி ஆசிரியர்கள் பேரவை மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் உட்பட  பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட் டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரை யின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், முது கலை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக் குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக் கும் ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும். பல்வேறு  துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர் கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண் டும். கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலு வையிலுள்ள பணி மேம்பாடு ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வருபவர் களுக்கு தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் எம்ஆர்பி செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல் நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக் காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணி யிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கை களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் நவ.1 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மாலைநேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்வது; நவ.15 முதல் 24 ஆம் தேதி வரை ஆசிரியர், அரசு ஊழியர், அரசுப் பணியாளர் சந்திப்பு போராட்ட பிரச்சார இயக்கம் .நடத்துவது;  நவ.25 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தை நடந்துவது என முடிவு செய்யப்பட்டது. ஈரோடு இதேபோன்று ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், முத்து ராமசாமி, வீராகார்த்திக், ஆறுமுகம், மலர் விழி சந்திரசேகரன் மற்றும் ச.விஜயமனோ கரன் ஆகியோர் தலைமை வகித்தனர். இக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அரசு ஊழியர்கள் சந்திப்பு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங் களை வெற்றிகரமாக்குவது என முடிவு எடுக் கப்பட்டது. மேலும், டிச.28 ஆம் தேதி சென்னை கோட்டையை முற்றுகை போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது எனவும் தீர்மா னிக்கப்பட்டது.