திருப்பூர், செப்.17- அங்கன்வாடி பணியாளர்களை மரி யாதை குறைவாக பேசிய அவிநாசி வட் டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரை கண்டித்து சிஐடியு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் திங்களன்று உள்ளிருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். அவிநாசி சேவூர் சாலையில் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அலுவலகம் செயல் பட்டு வருகிறது. அவிநாசி வட்டாரத்தில் 124 அங்கன்வாடி மையங்கள் இத்திட்ட அலுவலர் அலுவலகத்தின் கீழ் உள் ளன. இதில், 184 ஊழியர்கள் மற்றும் உத வியாளர்கள் பணியாற்றி வருகின்ற னர். இதில், 40 மையங்களில் காலிப்பணி யிடங்கள் உள்ளன. இதனால் ஒவ் வொரு அங்கன்வாடி பணியாளரும் கூடுதலாக மூன்று மையங்களில் பணிச் சுமையுடன் பணியாற்றி வருகின்ற னர். மேலும், இந்த அலுவலகத்தில் கழிப்பிடம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இந்நிலையில் அவிநாசி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரசுவதி அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஊழியர் கள், உதவியாளர்கள், சங்க நிர்வாகிகள் என அனைவரையும் தரக்குறைவாக வும், மரியாதைக் குறைவாகவும் பேசி வந்துள்ளார். இதை கண்டித்தும், மாதந் தோறும் கூட்டம் நடைபெறும் இந்த அலுவலகத்திற்கு கழிப்பிட வசதி, மின் சார வசதி உள்ளிட்டவை ஏற்படுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு பணி யாளரும் கூடுதலாக 3 மையங்களில் பணிச்சுமையுடன் பணியாற்றி வருவ தால், போதுமான பணியாளர்களை நிய மிக்க வேண்டும் எனக்கோரி திங்களன்று சிஐடியு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சித்திரா தலை மையில், அவிநாசி வட்டார ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அலுவலகத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த போராட்டம் நடைபெற் றது. இதையடுத்து வளர்ச்சித்திட்ட அலு வலர் சரசுவதி தனது செயலுக்கு தனது வருத்தத்தை தெரிவித்தார். இதை யடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தில், சிஐடியு இணைச் செயலாளர் எல்லம்மாள், சங் கத்தின் மாவட்ட நிர்வாகிகள், அங்கன் வாடி ஊழியர்கள், உதவியாளர் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.