உதகை, அக்.3- அங்கன்வாடி மையங்களில் சமைய லுக்கு பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான முழு தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி சமையல் சிலிண்டருக்கு பாடை கட்டி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் நூதன போராட் டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி மையங்களில் பயன்படுத் தும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான முழு தொகையை வழங்க வேண்டும். அங்கன் வாடி ஊழியர்களுக்கு புதிய செல்போன் வழங்க வேண்டும். அரசு நியமிக்கப்பட்ட பணி களை தவிர இதர பணிகளை தரக்கூடாது. 10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள அங் கன்வாடி மையங்களை ஒருங்கிணைப்பதை தவிர்க்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாட அங்கன்வாடி பணி யாளர்களால் செய்யப்படும் செலவின தொகையை அரசு வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர்கள் சங்கத்தினர் சமையல் சிலிண்ட ருக்கு பாடை கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட னர். உதகை ஏடிசி திடலில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சசிகலா தலைமை வகித் தார். இதில், சிஐடியு மாவட்ட நிர்வாகி சுந்த ரம், மாவட்ட துணைத்தலைவர் கவிதா, விஜயன் உள்ளிட்ட திரளான அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு, கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி னர்.