districts

img

நீதி கேட்டு சேலத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

சேலம், அக்.12- பணிச்சுமையால் மதுரையைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது இறப்பிற்கு நீதி கேட்டு சேலத்தில் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம், சிம்மக்கல் பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் அம்ச வள்ளி என்பவர் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்தார். இதனிடையே ஊட்டச் சத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தின் பெயரில், கூடுதல் பணி சுமையை திணித்த தோடு, பரிசீலனைக் கூட்டத்தில் அனைவரின் முன்னிலையிலும் அவர் அவமானப்படுத்தப் பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அவரு டைய இறப்பிற்கு காரணமாக இருந்த ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலு வலர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மீதும் உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காலிப்பணி யிடங்களை நிரப்பாமல், கூடுதல் பொறுப்பு என்ற பெயரால் பணிச்சுமையை அதிகரிக்கக் கூடாது. செயல்படாத கைபேசிகளை திரும் பப்பெற வேண்டும். அனைத்து பதிவேடு களையும் அரசே வழங்க வேண்டும். பிற  துறை பணிகளை செய்ய சொல்லி வற்புறுத் தக்கூடாது. அலுவலர்கள் மூலம் ஊழியர் களை மிரட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.வசந்த குமாரி தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் எம்.சரோஜா, மாவட்டச் செயலாளர் எம்.மனோன்மணி, மாவட்டப் பொருளாளர் மேரி, சிஐடியு மாவட்ட நிர்வாகி செந்தில் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழி யர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவேச முழக்கங்களை எழுப் பினர்.