சேலம், பிப்.17- விழுப்புரம் அன்பு ஜோதி தனி யார் காப்பகத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம், அன்பு ஜோதி தனியார் காப்பகத்தில் மன நலம் பாதித்தவர்களை சங்கிலி யால் கட்டி வைப்பது குரங்குகளை வைத்து கடிக்க வைப்பது, போதை மருந்துகளை உட்கொள்ள வைத்து, பாலியல் ரீதியான வன்கொடுமை களும் நடந்துள்ளது. இந்த கொடூர மான நடவடிக்கைகளை கண்டித் தும், அன்பு ஜோதி தனியார் காப்ப கத்தில் நடைபெறும் அத்துமீறல் களை தடுத்து நிறுத்த வேண்டும். இக்கொடூர சம்பவங்கள் குறித்து விசாரிக்க சிபிசிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என வலி யுறுத்தி, மாதர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, மாதர் சங்க மாவட்ட தலைவர் வைரமணி தலைமை ஏற் றார். இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தேவி, மாவட்ட பொருளாளர் ஐ.ஞானசௌந்தரி, துனைத்தலைவர் கே.ராஜாத்தி, நிர்வாகிகள் கவிதா, டி.பரமேஸ் வரி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.
கோவை
கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத் தின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ். ராஜலட்சுமி தலைமை ஏற்றார். இதில், மாதர் சங்க மாவட்ட தலை வர் ஜோதிமணி, செயலாளர் சுதா, சிபிஎம் கோவை மாமன்ற உறுப்பி னர் சுமதி, காரமடை நகராட்சி 1 ஆவது வார்டு கவுன்சிலர் ப்ரியா மற் றும் மாதர் சங்கத்தினர் திரளா னோர் பங்கேற்றனர்.
திருப்பூர்
ஊத்துக்குளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க தாலுகா துணைத்தலைவர் வி.மீரா லட்சுமி தலைமை ஏற்றார். இதில், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கு.சரஸ்வதி, தாலுகா பொருளா ளர் சி.வண்ணக்கொடி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் செளந்தர்யா உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.