districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

யானை தாக்கி முதியவருக்கு காயம்

கோவை, டிச. 21- நரசிபுரம் அருகே யானை தாக்கியதில் கால் முறிவு ஏற் பட்ட முதியவரை மீட்ட வனத்துறையினர் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். கோவை நாரசிபுரம் அடுத்த விராலியூர் பகுதியை சேர்ந் தவர்  சின்னசாமி (65). இவர் சம்பவத்தன்று, தொண்டா முத்தூர் அருகே உள்ள ரங்கநாதன் கல்லூரியின் வழியாக  நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காட்டு  யானை ஒன்று வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சிய டைந்து சின்னசாமி சுதாரிப்பதற்குள், யானை தாக்கி விட்டு சென்றுள்ளது. இதில், சின்னசாமிக்கு இடது காலில்  பலத்த காயம் ஏற்பட்டு கால் முறிவு ஏற்பட்டது. இவரின் அல றல் சத்தம் கேட்ட அவ்வழியாக வந்தவர்கள் வனத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பிஎன்பிடி ஆல்ஃபா வனப்பணியளர்கள் சின்னசாமியை மீட்டு  108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு இவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில  தினங்களாக இந்த பகுதியில் ஒற்றைக் காட்டு யானை  சுற்றி வருகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள மக்க ளுக்கு அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் வெளியில் வரு வதற்கே அச்சமான சூழல் உள்ளது. வனத்துறையினர் இப்ப குதியில் தீவிர ரோந்து நடவடிக்கையில், ஈடுபட வேண் டும். மேலும், காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுத்து  அடர் வனத்திற்குள் அனுப்ப வேண்டும் என்கிற கோரிக் கையை முன்வைத்தனர்.

சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி மறியல்

நீலகிரி, டிச.21- பந்தலூர் அருகே குடியிருப்பு பகுதியில் நடமாடி வரும்  சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா, பெருங்கரை பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக, சிறுத்தை ஒன்று முகாமிட்டு, கால்நடைகளை வேட்டை யாடி வந்தது. இதுகுறித்து, வனத்துறையிடம் புகாரளிக் கப்பட்டும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை இரவு ஏலமன்னா குடியிருப்பு பகுதிகளில் சரிதா என்பவரின் வீட்டின்  வாசலில் படுத்திருந்த சிறுத்தை அவரை தாக்கியது. அதில், பலத்த காயமடைந்த சரிதாவை உறவினர்கள் மீட்டு  உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனும தித்தனர். இதேபோன்று, வள்ளியம்மாள், துர்கா ஆகி யோரையும் சிறுத்தை தாக்கியுள்ளது. அவர்களும் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்து வரு வதால், வெளியில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பந்த லூர் - கொளப்பள்ளி சாலையில் எம்.எல்.ஏ. ஜெயசீலன் தலைமையிலும், பாந்தலூர் - பாட்டவயல் சாலையில் பொது மக்கள் இணைந்தும் மறியல் போராட்டங்களில் ஈடு பட்டனர். இதனால் தமிழக - கேரளா சாலையில் போக்கு வரத்து ஏற்பட்டது.

தேனீக்கள் தாக்கியதில் தொழிலாளர்கள் காயம்

கோவை, டிச.21- வால்பாறையில் தேயிலைத் தோட்டப்பணியில் ஈடுபட் டுக் கொண்டிருந்த தொழிலாளர்களை தேனீக்கள் தாக்கி யதில், 22 பேர் காயமடைந்தனர். கோவை மாவட்டம் வால்பாறை தமிழ்நாடு அரசு தேயி லைத் தோட்டத்திற்கு சொந்தமான பத்தாம் பத்தி உள்ளது.  அப்பகுதியில் தேயிலை பறிக்கும் பணியில் தொழிலா ளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பா ராத விதமாக அங்கு உள்ள தேனீக்கள் கூட்டில் இருந்து  வெளியே வந்து தொழிலாளர்களை தாக்கியது. இதில், 22  தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற் பட்டது. இதனையடுத்து, பாதிப்புக்குள்ளான தொழிலா ளர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இதில் ஹாரீம்பாய், அழகம்மாள் ஆகிய இருவரும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்து வமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கடன் தொல்லையால் மில் உரிமையாளர் தற்கொலை

ஈரோடு, டிச. 21- திருச்செங்கோடு அருகே டெக்ஸ்டைல் மில் நடத்தி வந்த  ராஜஸ்தான் மாநிலத்தவர் கடன் தொல்லையால் தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஸ்குமார் சேத்தியா (43). ஈரோடு, கருங்கல்பாளையம், கணபதிபுரம் எக்ஸ்டென்சனில் வசித்து வந்த இவர் திருச்செங்கோட்டில் டெக்ஸ்டைல் மில் வைத்து நடத்தி வந்தார். தொழில் சம்மந்த மாக வங்கி மற்றும் தனிப்பட்ட முறையில் சுமார் ரூ 20  கோடி வரை கடன் பெற்றுள்ளார். தொழில் நெருக்க டியால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் திணறி வந்துள் ளார். இந்நிலையில் செவ்வாயன்று சல்பாஸ் மாத்திரை உட்கொண்டுள்ளார். இதனையடுத்து,  மயக்கமடைந்தவரை, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சுதா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை  பலனின்றி ரமேஷ் குமார் உயிரிழந்தார்.

பரோட்டா சாப்பிட்ட மாணவர் மரணம்

கோவை, டிச.21- பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் திடீர் மாரடைப் பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.  திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன் (20). இவர் சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள டாக்டர் கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியில் படித்து வரு கிறார். இவர் கண்ணம்பாளையம் பகுதியில் தனது சகமாண வர்கள் 4 பேருடன் தனியாக அறை எடுத்து தங்கி படித்து  வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு  கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனது நண்பர்களுடன் பரோட்டா சாப்பிட்டுள்ளார். பின்னர் வழக்கம் போல் தனது  அறையில் தூங்க சென்று விட்டார். இந்நிலையில் வியாழ னன்று காலை, நண்பர்கள் எழுந்து பார்த்தபோது மாணவர்  ஹேமச்சந்திரன் அசைவு இல்லாமல் கிடந்துள்ளார். அதை  தொடர்ந்து  சகமாணவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாணவர்  பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவர் ஹேமச்சந்திரன் உயிரி ழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சக மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தக வலின் பேரில் வழக்கு பதிவு செய்து மாணவரின் பிரதே தத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார்  கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு பிரத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர்.

இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

மறுவாழ்வு பெற்ற இருவர்

கோவை, டிச. 21- விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் உறவினர்கள்  அனுமதியோடு தானம் செய்யப்பட்டது. இறந்தவரின் உடலை அரசு மரியாதை செலுத்தி உறவினர்களிடம் ஒப்படைத்தனர். திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை அடுத்த வரகுணராம்புரம் பகுதியைச் சேர்ந் தவர்  காஞ்சனா. கோவையில் உள்ள தனது  உறவினர் வீட்டில் தங்கி இளங்கலை பட்டப் படிப்பு படித்து வந்துள்ளார்.  இந்நிலை யில், கடந்த ஞாயிறன்று தனது நண்பரு டன் இருசக்கர வாகனத்தில் காஞ்சனா சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் பாராத விதமாக நிலை தடுமாறி கீழே  விழுந்ததில் காஞ்சனாவுக்கு  தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்து வமனையில்  அனுமதிக்கப்பட்டார். தொடர்  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலை யில் புதனன்று காலை காஞ்சனா மூளைச்சா வடைந்தார். இதையடுத்து அவரது உற வினர்கள் உடல் உறுப்புகளை தானமாக தர  முன் வந்தனர். அதன் அடிப்படையில் இரண்டு சிறுநீரகங்கள் தானமாக பெறப் பட்டன. இந்த சிறுநீரகங்கள் கோவை அரசு  மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நோயாளி ஒருவருக்கும் சேலம் அரசு மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நோயாளிக்கும் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து காஞ்சனாவின் உடலுக்கு கோவை அரசு  மருத்துவமனை ஊழியர்கள் அரசு மரி யாதை செலுத்தி உறவினர்களிடம் ஒப்படைத் தனர்.

டிச.26முதல் வினாவங்கி புத்தகம்

கோவை, டிச.21- பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாண வர்களுக்கான வினாவங்கி புத்தகங்கள் டிசம்பர் 26 ஆம்தேதி முதல் வழங்கப்ப டுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள் ளது.  இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பெற் றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினா வங்கி புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள் ளது. இதனை, ராஜவீதி பகுதியில் உள்ள  அரசு துணி வணிகர் பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் வருகின்ற 26ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. வினாவங்கி புத்த கங்கள் தேவைப்படும் பள்ளி மாணவர்கள், பெற்றோருடனோ அல்லது பள்ளிகள் வாயி லாகவோ பெற்றுக் கொள்ளலாம்.  மேலும், 10ம் வகுப்பு மாதிரி வினாத் தாள் புத்தகம்(தமிழ் வழி, ஆங்கில வழி) 120 ரூபாய், 10ம் வகுப்பு கணிதத் தீர்வு புத் தகம்(ஆங்கில வழி) 175 ரூபாய், 12ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு புத்த கம்(தமிழ் வழி, ஆங்கில வழி) 160 ரூபாய், 12ம் வகுப்பு கணித தீர்வு புத்தகம்( தமிழ் வழி, ஆங்கில வழி) 160 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு  வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - பொள்ளாச்சி கூடுதல் ரயில் சேவை

கோவை, டிச.21- கோவை - பொள்ளாச்சி வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24) முதல் கூடுதல் ரயில் சேவை தொடங்கப்பட உள் ளது. கோவையில் இருந்து பொள்ளாச்சி வழித் தடத்தில் பழனி, மதுரைக்கு கூடுதல் ரயில் கள் இயக்க வேண்டும் என தொடர்ந்து வலி யுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24) முதல் கோவை ரயில் நிலையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு கூடுதல் ரயில் சேவை தொடங்கி வைக்கப்படுவதாக தகவல் வெளி யாகியுள்ளது. இந்த ரயில் திங்கள்கிழமை (டிசம்பர் 25)  முதல் கோவையில் இருந்து காலை 5.20  மணிக்குப் புறப்பட்டு பொள்ளாச்சி ரயில் நிலையத்தை காலை 6.30 மணிக்கு சென்ற டையும். பொள்ளாச்சியில் இருந்து காலை 7.30 மணிக்குப் புறப்பட்டு கோவைக்கு காலை  8.45 மணிக்கு வந்தடையும். இதேபோல், பிற்பகல் மற்றும் இரவு என மொத்தம் 3 டிரிப்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 6.30 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும் ரயிலில் செல் லும் பயணிகள், பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு காலை 6.50 மணிக்கு வந்த டையும் பாலக்காடு - திருச்செந்தூர் ரயிலில்  பயணிக்க வசதியாக இந்த கூடுதல் சேவை  இயக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரத்து

திருப்பூர், டிச.21- டிச.22, டிச.29, மற்றும் 2024 ஜன.5 ஆகிய நாட்களில் நடை பெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அறை எண் 20ல் மாற்றுத்திற னாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு  முகாம் நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் டிச.22, டிச.29, மற்றும் 2024 ஜன.5  ஆகிய நாட்களில் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்ய்ப்படுகிறது என  மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

பனியன் நிறுவன அலுவலர் உயிரிழப்பு

அவிநாசி, டிச.21- அவிநாசி அருகே பெருமாநல்லூரில்  இருசக்கர வாகனத் தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில்,  பனியன் நிறுவன  அலுவலர் புதன்கிழமை உயிரிழந்தார்.  அவிநாசி அருகே சேவூர் தேவேந்திர நகரை சேர்ந்த அங் கப்பன் மகன் ரவிக்குமார் (45). பனியன் நிறுவன அலுவலர்.  இவர் புதிய திருப்பூரில் இருந்து பெருமாநல்லூர் நோக்கி இரு  சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது  கோவையில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக வந்த கார்  இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த ரவிக்குமார் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இதையடுத்து இவரது உடல் பிரேத பரி சோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டது. இது குறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின் றனர்.

வாக்கு பதிவு எந்திரம் விளக்க மையம்

திருப்பூர், டிச.21- அடுத்த ஆண்டு மக்கள வைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்கு பதிவு எந்திரம் செயல்படும் முறை குறித்து மக்களுக்கு பயிற்சி அளிக் கும் வகையில்  விளக்கம்  மையம் அமைக்கப்பட் டுள்ளது. தினசரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுக்கு விசைத்தறியாளர்கள் நன்றி

ஈரோடு, டிச.21- மின்கட்டண அபராதத்தை ரத்து செய்த தமிழ்நாடு அர சுக்கு விசைத்தறியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்ட மைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்ட மின் கட்ட ணம் குறைக்கப்பட்டது. முன்னதாக, செப்டம்பர் மாதம்  முதல் மின் கட்டணம் செலுத்த மாட்டோம் என்று கூட்டமைப்பு அறிவித்தது. கட்டணத்தை விசைத்தறியாளர்கள் அபராதத்து டன் கட்டுவதற்கு ஆறு மாதம் தவணை அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஆறு மாதம் தவணையை ஏற்றுக்கொண்ட கூட் டமைப்பு அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும்  என்று பலமுறை தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப் பட்டிருந்தது. அதன்பயனாக கடந்தாண்டு செப்டம்பர் 2022  முதல் இந்த ஆண்டு ஏப்ரல் 2023 வரை உண்டான மின்கட்ட ணத்தின் அபராதத்தொகையான ரூ.69 லட்சத்து 16 ஆயிரத்து 901யை தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரி வித்துள்ளனர்.

ஒரே நாளில் பெயர்ந்த சாலை

மே.பாளையம், டிச.21- மேட்டுப்பாளையத்தில் ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் போடப் பட்ட சாலை, ஒரே நாளில் பெயர்ந்ததால் ஊராட்சித் தலை வரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள  பெள்ளேபாளையம் கிராமத்தில் முதல்வரின் கிராம சாலை  திட்டத்தின்கீழ் ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக் கப்பட்டது. அன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து குமரன் குன்று கோயில் வரை சுமார் 1.8 கிலோ மீட்டர் தூரத் திற்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றத்து. இப்பணி செவ்வாய்கிழமை முழுமையாக முடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனு மதிக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் சாலை பெயர்ந்துள் ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள், அப்பகுதி ஊராட்சிமன்ற தலைவர் சிவகுமாரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.  இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்து  உரிய நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி தலைவர் உறுதிய ளித்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

ஈரோடு, டிச.21- பவானி கூடுதுறை பிரிவில் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத் துக்குள்ளானது. சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து நிலக்கரி சாம்பல்  பாரம் ஏற்றிக்கொண்டு பவானி வழியாக கோவைக்கு கண் டெய்னர் லாரி புதனன்று அதிகாலை சென்று கொண்டிருந் தது. லாரியை மேட்டூரைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் (27) ஓட்டி யுள்ளார். பவானி கூடுதுறை பிரிவு அருகே வளைவில் திரும் பியபோது, லாரியின் பின்பக்க டயர் வெடித்ததில், கட்டுப் பாட்டை இழந்த லாரி பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில்,  ஆவின் பாலகம் முன்பு சாலையோரத்தில் அடுக்கி வைக் கப்பட்டிருந்த பால் பாக்கெட்டுகள் உடைந்து, சாலையில் பால்  ஓடியது. இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட தைத் தொடர்ந்து, பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாற்று வழித்தடத்தில் வாகனங்களைத் திருப்பிவிட்டனர். இதைத்தொடர்ந்து, மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பவானி போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆற்றில் இறந்து கிடந்த ஆண் யானை

உதகை, டிச.21- நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி வனப் பகுதியில், ஆண் யானை ஒன்று ஆற்றில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறை விசாரணை மேற்கொண்டனர்.   பந்தலூர் அருகே சேரம்பாடி சப்பந்தோடு பகுதியில், வனப்பகுதி மற்றும் தனியார் விவசாய தோட்டங்கள் உள் ளது. இந்த பகுதியில் வனக்குழுவினர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆற்றின் நடுவே ஆண் யானை ஒன்று உயிரிழந்த கிடந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வனச்சரகர் அய்யனார் தலைமையிலான, வனக்குழுவினர் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் ஆற்றுக்குள் கிடந்த  யானையை வனக்குழுவினர் மற்றும் ஜேசிபி உதவியுடன் மேலே இழுத்து கொண்டுவரப்பட்டது. அங்கு முதுமலை புலி கள் காப்பக  கால்நடை டாக்டர் ராஜேஷ் தலைமைதான மருத்துவ குழுவினர் உயிரிழந்த யானைக்கு பிரேத பரிசோ தனை செய்தனர். உயிரிழந்தது 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பதுடன், யானை உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

பாலியல் தொல்லை:  வாலிபருக்கு 12 ஆண்டுகள் சிறை

உதகை, டிச.21- நீலகிரி மாவட்டம், சேரம்பாடி பகுதியில் 30 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் வசித்து வருகிறார். இவரது வீட்டின் எதிரே வசித்து வரும் மணிகண்டன் (24) என்ற இளைஞர், மாற் றுத்திறனாளி பெண் தனியாக இருப்பதை பயன்படுத்தி பாலி யல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு உதகை மக ளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதன் தீர்ப்பு வியாழ னன்று வழங்கப்பட்டது. குற்றவாளி மணிகண்டனுக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பு வழங்கி னார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.

வங்காளதேசத்தை சேர்ந்த 8 பேருக்கு சிறை

தருமபுரி, டிச.21- தருமபுரி அடுத்த பப்பிநாயக்கன அள்ளி கிராமத்தில் கடந் தாண்டு ஜனவரி மாதம் வங்காள தேசத்தைச் சேர்ந்த எட்டு  பேர் பாஸ்போர்ட், விசா இல்லாமல் குடிசை அமைத்து தங்கி  உள்ளனர். இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார்  நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், வங்காளதேசத்தைச் சேர்ந்த முகமது ரபிக் தாலுக்தார் (63), பர்வேஸ் அவில்தார் (26) சாதியா பேகம்(23) உள்ளிட்ட எட்டு பேருக்கு நீதிபதி மோனிகா இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராத மும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.