உடுமலை, செப்.29- உடுமலை தாலுக்கா மலைப்பகு தியான ஈசல்திட்டில் மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவரை தொட்டில் கட்டி மருத்துவமனைக்குத் தூக்கி வந்தனர். உடுமலை தாலுக்கா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 18 மலை வாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு ஒற்றை அடி பாதையில் நடத்து தான் செல்ல வேண்டும். மலைவாழ் குடியி ருப்பு பகுதிகளுக்கு பாதை அமைக்க வலியுறுத்தி சில மாதங்களுக்கு முன்பு உடுமலை வன அலுவலகத் தில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைமையில் மலைவாழ் மக்கள் தொடர் காத்திருப்பு போராட் டம் நடத்தினர். இதையடுத்து, மலை பகுதியான குருமலை பகுதிக்கு சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் வனக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலை யில், வெள்ளியன்று உடுமலை ஜல்லி பட்டி அருகே உள்ள மலைப்பகுதி யான ஈசல்திட்டில் சின்ன கூலையன் என்பவர் மரத்தில் இருந்து தவறி விழுந்தவிட்டார். இவரை அப்பகுதி மக்கள் தொட்டில் கட்டி உடுமலை மருத்துவமனைக்கு கொண்டு சென் றனர். இதுபோன்ற நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க விரைந்து சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மலை கிராம மக்கள் கோரினர்.