கோவை, ஏப்.3- கோவை அருகே மாட்டு கொட்டகைக்குள் புகுந்த காட்டு யானை அங்கிருந்த புண்ணாக்கு மூட்டையை தூக்கிச் சென்ற சம்பவம், அப்பகுதி மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்ப டுத்தியது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலை யில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக யானை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து வருகின்றன. இதே போன்று கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்சி மலையை ஒட்டி யுள்ள வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், வனத்து றையினர் வாகனங்கள் மூலம் வனப்பகுதிக்குள் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பி வருகின்றனர். எனினும் உணவு பற்றாக்குறை உள்ளதால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்புகளை நோக்கி வருவது தொடர்கதை யாக இருந்து வருகிறது. இந்நிலையில் போலுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட காருண்யா அருகே உள்ள சப்பானிமடை பகுதி யில் செவ்வாயன்று இரவு ஒற்றை யானை அங்கிருந்த விவசாய நிலத்திற்குள் புகுந்து விவசாய பயிர்களை சாப்பிட்டது. பின்னர் அங்கு இருந்த மாட்டு கொட்டகைக்குள் புகுந்து அங்கிருந்து புண்ணாக்கு மூட்டையை தூக்கி சென்றது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த வனத்துறையி னர் சைரன் ஒலி எழுப்பி யானையை அங்கிருந்து வனப் பகுதிக்குள் விரட்டினர். இதனிடையே மாட்டு கொட்டகைக் குள் புகுந்த யானை பார்த்து “போ சாமி” “மாடுகள் மிரள்கிறது, என விவசாயி ஒருவர் கொஞ்சி பேசி யானையை விரட்டும் செல்போன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது.