districts

img

ஐவர் மலை அடிவாரத்தில் வெடிமருந்து!?

வெண்முகில் இறங்கிய மலை உச்சியிலிருந்து மழைநீர் வழியும் அழகு ஐவர் மலைக்கு உரியது. எந்த திசையில் இருந்து பார்த்தாலும் கம்பீரமாக காட்சியளிக்கும் ஐவர் மலை பழனி யின் அடையாளங்களில் ஒன்று.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சமணப்பள்ளி இருந்த இடம்

ஐந்து தீர்த்தங்கரர்கள் வாழ்ந்த இடம் என்பதால் ஐவர் மலை எனப் பெயர் பெற்றது. தொல்லியல் துறை யின் கட்டுப்பாட்டில் இருக்கும் மலை மீது முருகனும், பிள்ளையாரும், திரௌபதியும் மக்களின் வழிபாட்டு கடவுள்களாக இருக்கிறார்கள். நீண்ட காலமாக இராமலிங்க அடிகளாரின் தொண்டர்கள் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை எனும் அமைப்பை அறச்சிந்தனையுடன் நடத்தி வருகிறார்கள். ஐவர் மலைக்கும் அதற்கு நேர் எதிர்புறம் உள்ள துரியோதனன் மலைக்கும் இடையே செல்லும் ராஜ பாட்டை பன்னெடுங்காலமாக உள்ளது. முன்னொரு காலத்தில் ஐவர் மலைக்கு மேற்குப் பக்கம் உள்ள கொழுமம் சர்வதேச சந்தை யாக இருந்தது.

கடல் மார்க்கமாக கப்பல்கள் மூலம் கேரளா வழியாக வரும் வெளிநாட்டு வணிகர்களுக் கான பொருட்கள் உள்நாட்டிலிருந்து ராஜபாட்டை வழியாக வண்டிகளில் கொண்டு செல்லப்படும். இரண்டு  மலைகளைச் சுற்றிலும் தொல்குடி மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஐவர் மலையைச் சுற்றிலும் விவ சாய பூமிகள் நிறைந்துள்ளன. விவ சாயத்தை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடிமக்கள் அமைதியான சுற்றுச்சூழலுடன் நிம்மதியாகவும் பாதுகாப்புடனும் வாழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே பழனி கொழுமம் ரோட்டிற்கு தெற்குப் பக்கம் நவீன ராட்சத செங்கற்சூளைகள் நிரம்பி வழி கின்றன. தற்போது ரோட்டிற்கு வடக்குப் பக்கம் 250 ஏக்கர் பரப்பள வில் மிகப்பெரிய வெடிமருந்து ஆலை அமைவதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வருகிறது. அதுவும் ஐவர் மலையை ஒட்டி அமைக்கப்படு கிறது. நிலத்தடி நீரும், தூய காற்றும் மாசுபடும். மனிதர்களும், விலங்கு களும், பல்லுயிரிகளும், புல் பூண்டு களும் வாழத் தகுதியற்ற பாலை நில மாக மாறிவிடும். விபத்துஏற்பட்டால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும்.

பழனி என்ன  பாவம் செய்தது?'

கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பழனி சட்டமன்ற உறுப்பினர் வெடி மருந்து ஆலை கொண்டுவர அனுமதிக்க மாட்டேன் என பாப்பம்பட்டி மக்கள் மத்தியில் சூளுரைத்தார். ஆனால் காரியங்கள் இன்று கைமீறிப் போய்க் கொண்டி ருக்கிறது. அப்பகுதியைச் சேர்ந்த  பொதுமக்கள் மற்றும் விவசாயி களின் கருத்துக்களைக் கூட அறி யாமல் மாவட்ட ஆட்சி நிர்வாகம் வெடி மருந்து ஆலை கட்டுவதற்கு பக்கபல மாக இருந்து வருகிறதென விவசாயி கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வெடிமருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை மூடி மறைத்து ஏற்றிக்கொண்டு வரிசையாக லாரி கள் ஐவர் மலையைச் சுற்றிலும் வலம் வருகின்றன. ஒரு கார்ப்பரேட் கம்பெனி முதலாளியின் லாபவெறி க்கு பழனி வேட்டைப்பகுதியாக மாறி விடுமோ என்ற அச்சத்திலும் பீதியிலும் மக்கள் உறைந்து போய் உள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழக அரசு அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது. அதனால் தான் ஸ்டெர்லைட் ஆலை விசயத்தில் அவ்வளவு கடுமை காட்டுகிறது. பழனி என்ன பாவம் செய்தது? தொன்மையையும், பழமையையும் பண்பாட்டு கலாச்சாரத்தையும் தொலைத்துவிட்டு நல்ல காற்றை யும் நிலத்தடி நீரையும் இழந்து விட்டு நடைப்பிணங்களாக வாழ சபிக்கப் பட்டிருக்கிறோமோ. தெரிய வில்லை. எங்கோ இருக்கும் வடமாநி லத்தைச் சேர்ந்த கார்ப்பரேட் முத லாளியின் சுயநலத்திற்கும் சொகுசு வாழ்க்கைக்கும் இரையாவோமோ.. புரியவில்லை. தமிழக அரசும் மாவட்ட ஆட்சி  நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு வெடிமருந்து ஆலை வேலைகளை தடுத்து நிறுத்த வேண்டும். முளை யிலேயே கிள்ளி எறிய கடும் நட வடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வேண்டு கோளாக இருக்கிறது.