districts

img

சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு நாள்: தமிழகம் முழுவதும் மலரஞ்சலி

தஞ்சாவூர் டிச.6- தஞ்சாவூர் மாவட்டத்தில், சட்ட மாமேதை பாபா சாகேப் அம்பேத்கரின் 63 ஆவது நினைவு தினத்தை  ஒட்டி சிபிஎம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமுஎகச உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் அன்னாரது சிலைக்கும், உருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  தஞ்சையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் கே.அபிமன்னன், என். சிவகுரு, இரா.புண்ணியமூர்த்தி, ப.சத்தியநாதன், சே. செல்வராஜ், வடிவேலன், கருப்புசாமி, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், பி.செந்தில்குமார், கே.அருளரசன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தோழர்கள் கலந்து கொண்டனர்.

திருக்காட்டுப்பள்ளி 

திருக்காட்டுப்பள்ளி காந்தி சிலை அருகில் அலங்க ரிக்கப்பட்ட அம்பேத்கரின் உருவப் படத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைச் செயலாளர் பி.எம். இளங்கோவன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. தமுஎகச நிர்வாகி பி. தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.காந்தி, மாதர் சங்க மாநி லக்குழு உறுப்பினர்  பி.கலைச்செல்வி, அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளர் ஆர்.தனசேகரன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் சங்க மாவட்டத் தலைவர் கே.லட்சுமணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க திரு வையாறு ஒன்றியச் செயலாளர் துரை.ராமலிங்கம் மற்றும் பரமசிவம், காளிமுத்து, தென்னரசு, சிவா, கண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறை வாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.எம். ராஜேந்திரன் நன்றி கூறினார். 

அம்மாபேட்டை

 அம்மாபேட்டை நால்ரோடு அருகில் உள்ள அம் பேத்கரின் உருவச்சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. சிபிஎம் அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன், நகரச் செயலாளர் ரவி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.முனியாண்டி, சிபிஎம் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் கே. கோபாலன், ராஜேந்திரன், புளியங்குடி கிளைச் செயலாளர் சிவலிங்கம் கலந்து கொண்டனர். பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் உருவச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் வி.கருப்பையா தலை மையில் மாலை அணிவிக்கப்பட்டது. பேராவூரணி ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி, சேதுபாவா சத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, நகரச் செயலாளர் வெ.ரெங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரக் குழு ராஜா முகமது மற்றும் கருப்பையா, வேம்பையன், கணேசன், பெரியசாமி, இளங்கோ கலந்து கொண்டனர். 

திருத்துறைப்பூண்டி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேதை சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தமிழ் மாநில குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் மாலை அணிவித்தார்.  கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதி பாசு, கே.ஜி.ரகுராமன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சுப்ரமணியன், எஸ் சாமிநாதன்,  எம்.பி.கே.பாண்டி யன், ஒன்றிய செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ், விவசாய சங்க நகர செயலாளர் எம்.ஜெயபிரகாஷ், விவசாயத் தொழிலாளர் சங்க நகர செயலாளர் எஸ். தண்டபாணி, நகரக்குழு ஆர்.எம் சுப்பிரமணியன், கே.கோபு, ஏ.கே. செல்வம், ஒன்றியக்குழு பி.என். தங்கராசு, வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ஏ.கே வேலவன், நகர செய லாளர் சி.சிவசாகர், மதன், ராகவன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி

மன்னார்குடியில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அம்பேத்கரின் நினைவு தினம் கடைபிடிக் கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக்குழு சார்பில் நகரச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் மன்னார்குடி நகரில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  தீண்டாமை ஒழிப்பு முன்னணி நகரச் செயலா ளர் கே.பிச்சைக்கண்ணு, நகரக்குழு உறுப்பினர்கள் ஜி. ரெகுபதி, ஜி. தாயுமானவன், எம். சிராஜுதீன், கே. அகோரம், எம். மகாதேவன், ப. தெட்சிணாமூர்த்தி, மாதர் சங்க நகர தலைவர் தெ. சங்கரி, கிளை செய லாளர் ராதாகிருஷ்ணன் வீ.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒன்றியக்குழு சார்பாக எம். திருஞானம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமுஎகச சார்பில் மாவட்ட தலைவர் இரா. தாமோ தரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்டக்குழு உறுப்பினர் யு.எஸ். பொன்முடி. கிளை நிர்வாகிகள் இரா. யேசுதாஸ். எஸ். சுந்தரராஜ கோபா லன். பாஸ்கர், பாரதிபூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற் றனர். சிஐடியு சார்பாக கே. முனியாண்டி, ஏகாம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விசிக சார்பில் ஒன்றிய செயலாளர் ரா. செங்குட்டுவன் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். மா. ஜெயக்குமார் மன்னை பவுத்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சிராப்பள்ளி

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலைய அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பி னர் எஸ்.ஸ்ரீதர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பி னர்கள், பகுதிகுழு செயலாளர்கள், சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், டிஆர்இயுவினர், ஆட்டோ, போக்குவரத்து சங்கம் உள்பட தோழமை சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  ஈ.பி.ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமையில் மரியாதை செலுத் தப்பட்டது. சிபிஎம் மலைக்கோட்டை பகுதி செயலாளர் இளையராஜா, பாலக்கரை பகுதி செயலாளர் சிவக் குமார், சிஜடியு மாவட்ட தலைவர் ராமர், சுமைப் பணி நிர்வாகிகள் இளங்கோ, முருகன், பன்னீர் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அறம் மக்கள் நல சங்க தலைவர் ராஜா தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில துணைச்செயலாளர் பிரபா கரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உடனிருந்தனர். 

கும்பகோணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தை கட்சி, நீலப்புலிகள் இயக்கம் உள்ளிட்ட கட்சியினர் கும்பகோணம் சிஆர்சி பணிமனை முன்பு உள்ள அம் பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைப் பொதுச்செயலாளர் சின்னை. பாண்டியன் தலைமை வகித்தார். விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், விசிக மாவட்ட செயலாளர் தமிழருவி, விசிக மண்டல செயலாளர் விவே கானந்தன் நீல புலிகள் இயக்க தலைவர் இளங்கோ வன், சிபிஎம் நகர செயலாளர் செந்தில்குமார், தமுஎகச மாவட்ட தலைவர் ஜீவபாரதி, குடந்தை ஒன்றிய செயலா ளர் பி. ஏசுதாஸ், மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன் பக்கிரிசாமி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் கௌத மன், விசிக தொகுதி செயலாளர் முல்லை வளவன், இந்திய குடியரசு கட்சி கௌதமன், நீலப்புலிகள் இயக்கம் மாவட்ட செயலாளர் ராஜா, விடுதலை தமிழ் புலிகள் மாவட்ட செயலாளர் தை.சேகர். மதிமுக ஒன்றிய செயலாளர் அன்பு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில குழு உறுப்பினர் கண்ணன், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபாலன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் திருநாவுக்கரசு, பகத்சிங், தாமோதரன் மற்றும் பாலசுப்பிரமணியன், பாலகுரு, செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

நிகழ்வின் முன்னதாக கும்பகோணம் ரயில் நிலை யத்திலிருந்து ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தி னர்.  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) முனைவர் கு.சின்னப்பன்  அம்பேத்கர் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார். பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




 

;