districts

img

திருப்பூரில் அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம்

திருப்பூர்,  ஏப்.19 - திருப்பூரில் பிஎஸ்என்ல் மெயின் தொலைபேசி நிலை யத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் சிறப்புக் கருத் தரங்கம் நடத்தப்பட்டது. அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம், பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத் தொடர்பு  ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து புதனன்று இக்கருத்தரங்கை நடத்தினர். ஓய்வூ தியர் சங்கக் கிளை உதவித் தலைவர் பழனிவேல்சாமி தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைச்  செயலாளர் என்.குமரவேல் வரவேற்றார். இதில் அரசியல் சட் டமும், அண்ணல் அம்பேத்கரும் என்ற தலைப்பில் தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டச் செய லாளர் சி.கே.கனகராஜ் பேசினார். அம்பேத்கர் சிந்தனைக ளும், இன்றைய கடமைகளும் என்ற தலைப்பில் பிஎஸ்என்எல்  ஊழியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.செல்வரா ஜன் உரையாற்றினார். இக்கருத்தரங்கில் பிஎஸ்என்எல் ஊழி யர்கள், ஓய்வூதியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற் றனர். நிறைவாக, தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலா ளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.ரமேஷ் நன்றி  கூறினார்.