சேலம், செப்.8- நகர கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் இணைத்து பலப் படுத்த வேண்டும் என வலியுறுத்தி சேலம், நாமக்கல், ஈரோடு நகர கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மத்திய வங்கி ஊழியர்களுக் கும், நகர வங்கி ஊழியர்களுக்கும் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்ச படியில் 20 சதவிகிதம் உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களின் பணிக்கொடை சம்பந்தமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஊதிய உயர்வில் மத்திய வங்கி, நகர வங்கி ஊழி யர்களை தரம் பிரிக்கக்கூடாது. நகர கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் இணைத்து பலப்படுத்த வேண்டும். மத்திய வங்கி ஊழியர் களுக்கு உள்ளது போல நகர வங்கி ஊழியர்களுக்கும் ஓய்வூதிய திட்டத்தை உருவாக்க வேண்டும். கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையில் மூப்புநிலை பட்டியலை வெளியிட வேண்டும். உதவி மேலாளர் பதவி உயர்வில் 3:1 நடைமுறை ரத்து செய்ய வேண் டும். தனியார் பள்ளி, கல்லூரி களுக்கு அரசு நிர்ணயித்திடும் கட்டணத்தை, கல்விச்சலுகையாக தொடர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம், நாமக்கல், ஈரோடு நகர கூட் டுறவு வங்கி பணியாளர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் துணைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் பொதுச்செய லாளர் ராமமூர்த்தி, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.ஏ.ராஜேந் திரன், மாவட்டச் செயலாளர் எஸ். தீனதயாளன், துணைத்தலைவர் சிங்காரம் மற்றும் இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, குமாரபாளையம், அம்மாபேட்டை, சத்தியமங்கலம், ராசிபுரம், சேலம் நகரம், செவ்வாய்ப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.