districts

img

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை: உயரும் அணைகள் நீர்மட்டம்!

கோவை, அக்.10- நீர்பிடிப்பு பகுதிகளில் சில தினங் களாக பெய்து வரும் மழையின் கார ணமாக, அணைகளின் நீர்மட்டம் உயரத்துவங்கியுள்ளது. கேரளா மாநிலம், பாலக்காடு  மாவட்டம் மன்னார்காடு அருகே அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையிலிருந்து கோவைக்கு குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அணையின் ஒரு பகுதி யில் நீரேற்றும் நிலையம் அமைக் கப்பட்டு அதில் உள்ள 4 நீர் உறுஞ் சும் குழாய்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த குழாய்கள்  மூலம் தினமும் 10 கோடி லிட்டர் (100 எம்எல்டி) தண்ணீர் எடுக்க முடி யும். தென்மேற்கு பருவமழை துவங் கிய பின்னர் அணையின் நீர்மட்டம்  உயரத் தொடங்கியது. மழை நின்ற  பின்னர் நீர்மட்டம் குறைந்துவிட் டது.  இந்நிலையில், தற்போது மீண் டும் அணையின் நீர்பிடிப்பு பகுதி களில் பரவலாக மழை பெய்து வரு கிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிக ரித்து இருப்பதால், நீர்மட்டம் உயர்ந்து இருக்கிறது. இதில், வியா ழனன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 41.85 அடி யாக இருக்கிறது. தொடர்ந்து அணை யின் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை தமிழக - கேரளா அதிகாரிகள் கண்காணித்து  வருகின்றனர்.   வரட்டாறு அணை இதேபோன்று தருமபுரி மாவட் டம், அரூர் வட்டம், வள்ளிமதுரை, சித்தேரி, அரசநத்தம், கலசப்பாடி உள்ளிட்ட மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரு கிறது. இதன்காரணமாக வரட்டாற் றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வள்ளிமதுரை வரட்டாறு அணையின் மொத்த நீர்மட்ட உய ரம் 34.5 அடியில், இப்போது 30 அடியை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களுக்குள் அணை முழுக் கொள்ளளவை எட்டும் என  எதிர்பார்க்கப்படுகிறது. வள்ளி மதுரை வரட்டாறு அணையின் பாச னக் வாய்க்கால்கள் மூலம் கிடைக் கும் தண்ணீரால் அச்சல்வாடி, கீரைப் பட்டி, எல்லப்புடையாம்பட்டி, பொன் னேரி, வேப்பம்பட்டி, செல்லம்பட்டி ஊராட்சிகளுக்கு உள்பட்ட 15க்கும்  மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரி கள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீரை சேமிக்க முடியும். போதிய பராமரிப்பு இல் லாத காரணத்தால் அணையின்  வலது, இடதுபுற வாய்க்கால்கள் மூடியுள்ளது. இதனால் அணையி லிருந்து உபரிநீர் திறந்துவிடப்பட் டால் ஏரிகளுக்கு செல்வதில் பல் வேறு இடையூறுகள் ஏற்படும். எனவே, வள்ளிமதுரை வரட்டாறு  அணையின் இடது, வலதுபுறக் கால் வாய்களை தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி

உடுமலை திருமூர்த்திமலை யில் சுற்றுலாப் பயணிகள் அருவி யில் குளிக்கும் வகையில் செயற் கையாக உருவாக்கப்பட்ட பஞ்ச லிங்க அருவியில் மழை காலங்க ளில் தீடீர் வெள்ளம் எற்படும் அபா யம் உள்ளதால் கோவில் நிர்வா கத்தின் சார்பில் மழை பெய்யும் போது சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பார்கள். கடந்த சில  நாட்கள் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக மலை அடிவாரத் தில் இருக்கும் கோவில் வரை வெள்ளம் சூழ்ந்த நிலையில், சுற்று லாப் பயணிகளை கோவில் மற்றும் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல  தடை விதிக்கபட்டது. இந்நிலையில் மலைப்பகுதியில் போதிய மழை  இல்லாத காரணத்தால் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப் பட்டனர்.