districts

img

பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி,5ஜி அனுமதி வழங்கு

கோவை, பிப்.24-  பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி,5ஜி அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் பிஎஸ்என்எல் தொழிற்சங்க  கூட்டமைப்பினர் வெள்ளியன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏப்ரல் 5 ஆம் தேதி தில்லியில் நடை பெறும் விவசாயிகள், தொழிலாளர் கள் பேரணியை வெற்றியடையச் செய்வோம், ஊதிய பேச்சுவார்த்தை யை துவக்க வேண்டும். நிலுவையில்  உள்ள கோரிக்கைகளை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு ஏற்படுத்த  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து, பிஎஸ்என்எல் மத்திய ஒருங்கிணைப்பு குழு அறை கூவலையேற்று நாடு முழுவதும்,  பிஎஸ்என்எல் ஒருங்கிணைப்புக்குழு வின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதன்ஒருபகுதியாக, பொள்ளாச்சி  பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பிஎஸ்என் எல்யு மாவட்ட உதவி தலைவர் எஸ். மனோகரன் தலைமையேற்றார். ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள், பி. நிசார் அகமது, பி.தங்கமணி, பாரதி ராஜா, ஆர்.பிரபாகரன் உள்ளிட்டோர் உரையாற்றினர். ஈரோடு இதேபோன்று ஈரோடு டெலிபோன் பவன் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சின்ன சாமி தலைமை ஏற்றார். இதில், எல். பரமேஸ்வரன், எஸ்.செல்வராஜன், சையத் இத்ரீஸ், எஸ்.பாலு, கே.பழனிச் சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உரை யாற்றினர்.