districts

img

புதிய வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.2.42 கோடி நிதி ஒதுக்கீடு

கோபி, ஆக.28- கோபி காசிபாளையம் பேரூராட்சியில் புதிய வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.2.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு பேரூராட்சித் தலைவர் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் தமிழ்செல்வி வெற்றி வேல் தலைமையில் செயல் அலுவலர் மணிகண்டன் முன்னிலையில் நடைபெற் றது. இக்கூட்டத்தில், காசிபாளையம் பேரூ ராட்சியில் 15 ஆவது வார்டுகளில் புதிய வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்துவது குறித்தும், வார்டுகளில் குடிநீர், தெருவி ளக்கு, சாலைவசதி, பொதுசுகாதாரம் உள் ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இத னைதொடர்ந்து, காசிபாளையம் பேரூராட்சி யில் 15 ஆவது வார்டுகளில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்தும், புதிய திட்டப ணிகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக பேரூராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வி செயல் அலுவலர் மணிகண்டன் ஆகியோ ருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன. இதில், காசிபாளையம் பேரூராட்சியில் புதிய வளர்ச்சித்திட்டங்களுக்கு ரூ. 2 கோடியே 42 லட்சம் நிதி ஒதுக்கி தார்சாலை வசதி, சமுதாயக்கூடம் பராமரிப்பு பணிக ளுக்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், காசிபாளையம் பேரூராட் சியில்1,2,3,6,14 ஆவது வார்டு என பல் வேறு வார்டுகளில் சாலைப் பணிகளை தொடங்க விவாதித்து ஒப்புதல் பெற்று வார்டு களில் பணிகளை தொடங்குவது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட் டத்தில், பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தலை வர், துணைதலைவர், வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.