districts

img

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சேலத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 12 வார்டுகள்

சேலம், ஜன.30- நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லில் சேலம் மாநகராட்சியில் திமுக கூட்டணி சார்பில் இரண்டு வார்டு களில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் தொகுதி உடன் பாடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லில் சேலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் போட் டியிடும் தொகுதிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு தலை மையில் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், சேலம் மாநகராட்சி 24, 60 ஆவது ஆகிய வார்டுகளும், மேட் டூர் நகராட்சியில் 9ஆவது வார் டும், இடங்கணசாலை நகராட்சி யில் 9ஆவது வார்டும், பேரூராட்சி களில் அரசிராமணி 10ஆவது வார்டு, அயோத்தியாபட்டணம் 11  மற்றும் 13 ஆவது வார்டுகள், மேச் சேரியில் 3 ஆவது வார்டு, நங்க வள்ளி 1ஆவது வார்டு, பெத்த நாயக்கன்பாளையம் 7ஆவது  வார்டு, சங்ககிரியில் 13ஆவது வார்டு, வீரகனூர் 1ஆவது வார்டு, என மாநகராட்சியில் 2 வார்டுகள், நகராட்சியில் 2 வார்டுகள், பேரூ ராட்சியில் 8 என மொத்தம் 12  வார்டுகளுக்கான தொகுதி உடன் பாட்டுக்கு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. முன்னதாக இந்த பேச்சு வார்த்தையில் சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முக ராஜா, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எம்.குணசேகரன், பொன். ரமணி, மேற்கு மாநகர செயலா ளர் எம்.கனகராஜ், வடக்கு மாந கர செயலாளர் என்.பிரவீன் குமார், திமுக மாவட்ட செயலாளர் இரா.ராஜேந்திரன் எம்எல்ஏ, எஸ். ஆர்.பார்த்திபன் எம்.பி., கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், ஜி.கே.சுபாஷ் உள் ளிட்ட திமுக தலைவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் மேற்கு மாவட்ட பகுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி உள்ளிட்ட தலை வர்கள் கலந்து கொண்டனர்.