திருப்பூர், மார்ச் 7 - ஒன்றிய அரசின் கார்ப்பரேட் பெரு நிறுவன முதலாளிகளுக்கு ஆதரவான, தவறான பொரு ளாதாரக் கொள்கைகள் காரணமாக உள்ளூர் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வேலையின்மை சமூக நெருக்கடி அதிகரித்துள் ளது. இப்பிரச்சனையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்துடன் சுய நல அரசியல் சக்திகள் பிராந்திய அடிப்படை யில் வதந்தி பரப்புகின்றன என்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழுக் கூட்டம் திங்களன்று தியாகி பழ னிசாமி நிலையத்தில் மாவட்ட செயற்குழு உறுப் பினர் டி.ஜெயபால் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயலா ளர் செ.முத்துக்கண்ணன் உட்பட மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் வருமாறு: திருப்பூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிக ளிலும் சமீப காலமாக பின்னலாடை, விசைத் தறி உள்பட சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இத னால் ஏராளமான சிறு, குறு தொழில் நிறுவ னங்கள் நலிவை சந்தித்து வருவதுடன், கணிச மான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பும், வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பின்னணியில் புலம் பெயர்ந்து இங்கு வந்து வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் மீது, குறிப்பாக வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துக் கள் சமூக வலைத்தளங்களில் அண்மைக் கால மாக பெருமளவு பரப்பப்பட்டு வருகின்றன. ஒருபுறம் இங்குள்ள தமிழ்நாட்டு தொழி லாளர்களின் வேலைவாய்ப்பை, புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் அபகரித்துக் கொண்டதாக, தீவிர இனவெறியைக் கிளறி விடும் பிரிவினைவாத சக்திகள் வெறுப்பைத் தூண்டி விடுகின்றன. மறுபுறம், திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதாக, வட மாநிலங்களில் குறு கிய அரசியல் நோக்கத்தோடு பாரதிய ஜனதா உள்ளிட்ட வலதுசாரி மதவாத சக்திகள் வெறுப்பை விதைக்கும் வதந்திகளைப் பரப்பி வருகின்றன.
இந்த இரு வித கண்ணோட்டங்களும் தவறா னவை, பிரச்சனையை திசை திருப்பக் கூடி யவை. தொழிலாளர்கள் என்ற முறையில் சாதி, மத, இன, மொழி, பிராந்திய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு கடுமையாக உழைத்து வாழ வேண்டிய நிலையில் உள்ளனர். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு பின்பற்றக்கூடிய கார்ப்பரேட் பெரு நிறுவனங்களின் முதலாளிக ளுக்கு ஆதரவான கொள்கைகளே தற்போ தைய பொருளாதார நெருக்கடி, தொழில்கள் பாதிப்பு, வேலையின்மை பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாகும். இந்த உண்மையை அனைத்து பகுதி தொழிலாளர்களும், சிறு குறு தொழில் துறையினரும் உணர வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் இதை திசை திருப்பு வதற்காகவே உழைக்கும் மக்களை பல்வேறு வகையிலும் பிளவுபடுத்த முயற்சிக்கப்படுகி றது. எனவே குறுகிய அரசியல் நோக்கத்தோடு செய்யப்படும் எல்லாவித தவறான வெறுப்புப் பிரச்சாரங்களையும், வதந்திகளையும் நிராக ரித்து தொழிலாளி வர்க்கம் என்ற முறையில் உழைக்கும் மக்கள் ஒன்றுபட வேண்டும், ஆளும் வர்க்கத்தின் தவறான கொள்கைகளுக்கு எதி ராக அனைவரும் போராட முன் வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. லாப நோக்கில் அசுர வேகம் திருப்பூரில் இருந்து அவிநாசி வழித்த டத்தில் கோவைக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் திருப்பூர் நகரின் பல்வேறு நிறுத் தங்களிலும் அளவுக்கு அதிகமாக பயணி களை ஏற்றிக் கொண்டு காலதாமதம் செய்து விட்டு, நேரத்தை ஈடு கட்ட வேண்டும் என்ற கார ணம் சொல்லி, இந்த வழித்தடத்தில் உள்ள அவி நாசி, தெக்கலூர் நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்லாமல் அசுர வேகத்தில் இயக்குகின்றனர். இதனால் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பெண் ஒருவர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கோபத்தை யும் ஏற்படுத்தி உள்ளது.
லாபம் கொட்டும் இந்த வழித்தடத்தை பெறு வதற்காக, தனியார் பேருந்து முதலாளிகள் மிகப் பெரும் அளவு செலவு செய்து அனுமதி பெறுகின்றனர். ஆனால் இந்த பேருந்துகள் வழித்தடத்தில் உரிய முறையில் விதிமுறைப் படி இயக்கப்படுகிறதா என்று வட்டார போக்கு வரத்து அலுவலர் கண்காணிப்பது இல்லை. இதனால் ஏராளமான பயணிகள் பாதிக்கப்படு வதுடன், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. வரக்கூ டிய நாட்களிலும் இது தொடர் கதையாக இல் லாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகமும், வட்டா ரப் போக்குவரத்து அலுவலரும் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். பெண் உயிரிழப் புக்கு காரணமான பேருந்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மின் கட்டணத்தை உயர்த்தும் ஆபத்து ஒரே வளாகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவை அனைத்தை யும் ஒரே மின் இணைப்பாக மாற்ற வேண்டு மென மின் நுகர்வோர்களுக்கு மின்சார வாரியம் நோட்டிஸ் வழங்கி வருகிறது. இவ்வாறு செய்வ தன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப் புகள் மூலம் இதுகாறும் அனுபவித்து வரும் தலா 100 யூனிட் இலவச மின்சாரம் பறிக்கப்படும். மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு கள் அனைத்தையும் ஒரே மின் இணைப்பாக மாற்றுவதன் மூலம் கட்டண விகிதம் மாற்றப் பட்டு மின் கட்டணம் பல மடங்கு உயரும் ஆபத்து ஏற்படும். சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக் களும், வாடகை வீட்டில் குடியிருப்பவர்களும் மிக கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த முடிவை மின்சார வாரியம் கைவிட வேண் டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு கேட்டுக் கொண்டுள் ளது.