கோவை, டிச.27- ஒன்றிய அரசின் தேசிய பஞ்சாலை கழ கத்திற்கு சொந்தமான என்டிசி பஞ்சாலைகள் மூடப்பட்டு 31 மாத காலமாகியும் இதுவரை யில் திறக்கப்படவில்லை. பரிதவிக்கும் பஞ் சாலை தொழிலாளர்களின் நிலை குறித்து கவலைப்படாத பாஜக, ஒன்றிய அரசு கள்ள மௌனம் காப்பதாக அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் குற்றம்சாட்டினர். முன்னதாக, ஒன்றிய அரசிற்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை தொழிற்சங்க தலை வர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங் கினர். இதுகுறித்து சேவ் என்டிசி அமைப்பின் எல்பிஎப், ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், ஏடிபி, ஏஐசிசிடியு, என்டிடியு, அம் பேத்கர் சங்கம், என்டிஎல்எப், எல்டியுசி தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தொழிற்சங்க தலைவர் கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதா வது, என்டிசி பஞ்சாலைகள் ஒன்றிய அரசி னால், சட்டவிரோதமாக மூடப்பட்டு தொழிலா ளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிற்கதி யாய் நிற்கின்றனர்.
1965, 1966 ஆம் ஆண்டு களில் தனியார் பஞ்சாலை முதலாளிகளின் தவறான நிர்வாக கோளாறுகளால் தமிழ் நாட்டில் மட்டும் 15 பஞ்சாலைகள் மூடப்பட்டு பல ஆயிரம் பேர் வேலையின்றி தொழிலா ளர்கள் நிற்கதியாய் நிறுத்தப்பட்டுள்ளனர். அதுசமயம் தொழிற்சங்க இயக்கங்கள், மூடிய ஆலைகளை அரசே ஏற்று நடத்திட வேண்டும் என பல போராட்டங்களை நடத் திய போது, தமிழக முதல்வராக இருந்த மதிப் பிற்குரிய கலைஞர் அவர்களால் தமிழ்நாட் டில் மூடப்பட்டிருந்த பஞ்சாலைகளை இயக் கிட தமிழ்நாடு டெக்ஸ்டைல்ஸ் கார்பரேசன் அமைக்கப்பட்டு 1972 ஆம் ஆண்டு அவசர சட் டத்தின் மூலம் ஆலைகள் எடுக்கப்பட்டு இயக் கப்பட்டன. அதனை தொடர்ந்து நாடு முழுமை யும் மூடிக்கிடந்த பஞ்சாலைகளை 1974 ஆம் ஆண்டு, அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தி-யி்ன் நடவடிக்கையால் மேற்கண்ட ஆலைகள் உட்பட 123 ஆலைகள் ஒன்றிய அரசால் எடுக்கப்பட்டு என்டிசி மூலம் நல்ல முறையில் லாபகரமாக இயக்கப்பட்டு வந் தன.
கடந்த பல ஆண்டுகளாக நாடு முழுமை யும் 23 ஆலைகள் மட்டும் இயங்கி வந்தன. அதில் தமிழ்நாட்டில் கோவையில் 5 ஆலை களும், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் ஒரு ஆலையும், இராதநாதபுரம் மாவட்டம், கமுதக்குடியில் ஒரு ஆலையுமாக இயங்கி வந்தன. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆலைகள் இயங்கிட தடை விதித்தபோது 24.03.2020 ஆம் தேதி முதல் 17.05.2020 ஆம் தேதிவரை ஆலைகள் இயக் கப்படவில்லை என்பது ஏற்புடையதுதான். அதன்பின் தொழிற்சாலைகளை இயக்கிட ஒன் றிய, மாநில அரசுகள் உத்தரவு வழங்கிய பிறகும், என்டிசி - ஆலைகள் மட்டும் சட்ட விரோதமாக மூடப்பட்டு கடந்த 31- மாதங்க ளாக தொழிலாளர்களின் அடிப்படை வாழ்வா தாரம் மிகவும் பாதிக்கப்பட்டு சொல்லொ னாத் துயரம் அடைந்து வருகின்றனர். இப் பிரச்சனை தொடர்பாய் தொழிற்சங்க கூட்ட மைப்பினர் ஜவுளித்துறை அமைச்சரை இரு முறையும், துறை செயலாளர் ஆகியோரை 4 முறையும் சந்தித்து ஆலைகளை இயக்கிட வேண்டும் என வலியுறுத்தி பேசியும் இது வரை எவ்வித தெளிவான பதிலும் கிடைத் திடவில்லை.
இதனால், தமிழகத்தில் 7 ஆலைகளில் உள்ள 5000க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு அரசின் மூலம் ஒன்றிய அரசிற்கு அழுத் தம் கொடுத்திடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதுகுறித்து கடந்த 11.05.2022 ஆம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சரை யும், 27.05.2022-ஆம் தேதியன்று மாநில ஜவு ளித்துறை அமைச்சர் காந்தியையும் தொழிற் சங்க கூட்டமைப்பினர் சந்தித்து மனு அளித் தோம். தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிற்கு அழுத் தம் கொடுக்கும் நடவடிக்கையினை எடுத்திட வேண்டும். 5000 தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில் தொழிற்சங்க கூட்டமைப்பின் மேற்கண்ட மனு மீது தமிழ்நாடு அரசு எவ்வித நடவடிக்கை எடுத்துள்ளது என்பது பற்றி இதுவரையிலும் எவ்வித தகவலும் எங்களுக்கு தெரிய வில்லை. எனவே, தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒன்றிய ஜவுளித்துறைக் கும், என்டிசி-நிர்வாகத்திற்கும் அழுத்தம் கொடுத்திடும் நடவடிக்கையினை தமிழ்நாடு அரசு எடுத்திட வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியர் வலியுறுத்த வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.