districts

img

விவசாயிகள் படுகொலை: ஒன்றிய அமைச்சரை பதவி நீக்கிடுக!

தருமபுரி, அக்.3 லக்கிம்பூர் கேரியில் கார் ஏற்றி விவ சாயிகள் கொலை செய்யப்பட்ட சம்ப வத்திற்கு காரணமான ஒன்றிய பாஜக  அமைச்சரை பதவியிலிருந்து நீக்க வேண் டும் என வலியுறுத்தி அனைத்து மத்திய  தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2021 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசம் மாநிலம், லக்கிம்பூர் கேரி  மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயி கள் பேரணியில் நான்கு விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளரை கார் ஏற்றி  கொலை செய்த ஒன்றிய பாஜக அமைச் சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக் கொடூர சம்பவத்திற்கு காரணமாக இருந்த ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ் ராவை கைது செய்து, அமைச்சர் பதவி யில் இருந்து வெளியேற்ற வேண்டும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை ஒன்றிய அரசு சட்டமாக இயற்ற வேண்டும். முறைசாரா தொழி லாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உறு திபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி அனைத்து மத் திய தொழிற்சங்கங்கள் சார்பில் செவ் வாயன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாக ராசன் தலைமை வகித்தார். இதில் சம் யுக்தா கிசான் மோர்சா (எஸ்கேஎம்) ஒருங் கிணைப்பாளர் எஸ்.அர்சுணன், ஏஐடி யுசி மாவட்டச் செயலாளர் கே.மணி, சிஐ டியு மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, எல்பிஎப் மாவட்டச் செயலாளர் கே. அன்புமணி, மாவட்டத் தலைவர் பி.எம். சன்முகராஜா, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் கே.சிவலிங்கம், மாவட்டச் செயலாளர் சி.சண்முகம், எச்எம்எஸ் தலைவர் ஆர்.முருகானந்தம், செயலா ளர் எம்.அர்சுணன், ஏஐசிசிடியு மாவட் டத் தலைவர் கே.கோவிந்தராஜ், மாவட் டச் செயலாளர் சி.முருகன் உட்பட திர ளானோர் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எல்பிஎப் பழனியப்பன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு தலைவர் கள் கிருஷ்ணமூர்த்தி, எஸ்.கே.தியாக ராஜன், ஆர்.வெங்கடபதி, ஏ.கோவிந் தன், டி.உதயகுமார், ஏஐடியுசி பால குமார், ஐஎன்டியுசி சொர்ணராஜ், எச்எம்எஸ் கணேசன், ஏஐசிசிடியு வேல் முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.கணபதி உட்பட விவசாய, தொழிற்சங்க தலைவர்கள் திரனா னோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

இதேபோன்று ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி நால் ரோடு பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் ஏ.எம்.முனுசாமி தலைமை வகித் தார். இதில் தற்சார்பு விவசாயிகள் சங் கத்தின் கி.வெ.பொன்னையன், ஏஐடி யுசி எஸ்.சின்னசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம், எல்பிஎப் தங்க முத்து, ஏஐசிசிடியு கார்த்திகேயன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம், உதகையிலுள்ள ஏடிசி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலா ளர் சி.வினோத் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் நவீ;ன சந்திரன் துவக்க உரையாற்றினார். இதில் எல்பிஎப் தலைவர் நெடுஞ்செழி யன், விவசாய சங்க மாவட்டச் செயலா ளர் யோகண்ணன், ஏஐடியுசி  தலைவர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ் கரன், சிஐடியு மாவட்டத் தலைவர் எல். சங்கரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், எல்பிஎப் செய லாளர் ஜெயராமன் நன்றி கூறினார். நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலையில் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன், மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி மற் றும் எல்பிஎப், ஏஐடியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்க ளைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.