districts

img

அனுபவ நிலத்தை பறிப்பதை கைவிடுக

கோவை, பிப்.3- 200 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வரும் அனுபவ நிலத்தை பறிப்பதை கண்டித்து பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம், பொள் ளாச்சி தாலூகா, கூளாநாய்க்கன் பட்டி கிராமத்தில், 29 விவசாயி கள் 200 ஆண்டுகளுக்கு மேலாக  அனுபவத்தில் உள்ள நிலத்தை பறிக்கும் வகையில் இந்து அற நிலைத்துறை செயல்படுகிறது. இதனை கண்டித்தும், நிலத்தை  உழுபவர்களுக்கு அடங்கல் வழங்க கோரியும், பயிர்கடன் மான்ய உதவி கள்  வழங்ககோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி தாலுகா சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசா யிகள் சங்கம் மாநில துணைத் தலை வர் மதுசூதனன், கட்டபொம்மன் பண்பாட்டு குழு தலைவர் திருப்பூர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க தலைவர் எஸ். பரமசிவம்  விதொச மாவட்ட பொரு ளாளர் மகாலிங்கம், மார்க்சிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் அன்பரசன் உள்ளிட் டோர் உரையாற்றினர். இதில், திரளானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப் பினர். முன்னதாக, எங்களது கோவில், எங்கள் நிலம், அடங்கல் வழங்ககோரி சார் ஆட்சியர் பிரி யங்காவிடம் மனு அளித்தனர்.