பல்லடம், நவ. 23 - பல்லடம் நகரில் மின் மயானப் பணிகளை உடனே தொடங் குமாறு அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட் டுள்ளது. பல்லடம் தனியார் விடுதியில் புதன்கிழமை அனைத்து கட்சி கூட்டம் திமுக நகர செயலாளர் ந.ராஜேந்திரகுமார் தலை மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்லடம் நகரில் மின்மயான பணிகளை உடனே துவக்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டது. பல்லடம் நகரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும், சுற்றுவட்டார பகுதிகளில் 1 லட்சத்துக்கு மேற் பட்ட மக்களும் வசித்து வருகிறார்கள். இவர்களின் இல்லங்க ளில் நடைபெறும் துக்க நிகழ்வுகளுக்கு மின்மயானம் இல் லாத காரணத்தால் திருப்பூர், கொடுவாய், சூலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் கார ணமாக பெரும் பொருட்செலவும், கால விரயமும் ஏற்படு கிறது.. இந்த நிலையில் பல்லடம் பகுதி மக்களின் நலனை கவ னத்தில் கொண்டு பல்லடம் நகரில் மின்மயானம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமி ழக அரசு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022 கீழ் பல்ல டம் நகரில் மின்மயானம் அமைக்க ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பச்சாபாளையத்தில் கா.சா எண் 590ல் மயான வகைபாட்டில் உள்ள 6.50 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு துவக்க பணி கள் துவங்கியது.
அப்போது அருகில் ஆக்கிரமிப்பு செய்தி ருந்த சிலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நகராட்சியின் சார் பில் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் திட்டம் குறித் தான விளக்க கூட்டமும், திருப்பூர் கோட்டாட்சியர் அலு வலகத்தில் சமாதான கூட்டமும் நடைபெற்று திட்டம் குறித்து விளக்கப்பட்டது.இந்நிலையில் சில பேர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததால் பணிகள் நிலுவையில் இருந் தன. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக நீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆனது. இதன் கார ணமாக ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் பல்லடம் நக ரில் மின்மயான பணிகளை விரைந்து செயல்படுத்திட அனைத்து கட்சிகளின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் ஆர்.பரமசி வம் ஒன்றிய குழு உறுப்பினர் பி.ஆர்.ராஜேந்திரன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திமுக, இந்திய தேசிய காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி கட்சி, சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி, சார்பில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.