இளம்பிள்ளை, மே 18- சங்ககிரி பகுதியில் சாராய ஊறல் கண்டறிந்த மதுவிலக்கு போலீசார் அதனை அழித்தனர். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மதுவிலக்கு தணிக்கை காவல் ஆய்வாளர் தலைமை யில், வியாழனன்று ரோந்து மேற்கொண்டனர். அப்போது, சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவண்ண கவுண்டனூர் கிராமம், புட்டமனயில் பாறை இடுக் கில் சுமார் சுமார் 50 லிட்டர் சாராய ஊறல் இருப்பது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற மதுவிலக்கு போலீசார் அதனை கைப்பற்றி அழித்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து, சாராய ஊறலை பதுக்கிவைத்தவர்கள் குறித்து தேடி வருகின்றனர்.