சேலம், ஜூன் 8- பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி சேலம் ஆட் சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 17 பெண் கள் உட்பட 24 பேரை காவல் துறை யினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், அய்யம்பெரு மாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் திராவிட புலிகள் இயக்க தலைவர் சுந்தரம் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்போது ஆட்சியர் வளாக முன்பு திடீரென அமர்ந்து பஞ்சமி நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலறிந்து வந்த காவல் துறையினர், பேச்சுவார்த்தை நடத் தினர். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெகநாதன், போராட் டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டார். அதிலிலும் உடன் பாடு ஏற்படாத நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு, முழக்கங் களை எழுப்பினர். இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள் உட் பட 24 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து போராட்டக்காரர் கள் கூறுகையில், அய்யம்பெரு மாம்பட்டி பகுதியில் மூன்று தலை முறையாக 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின் றன. அந்த இடத்தை அதிமுக நிர்வாகி ஒருவர் ஆக்கிரமித்து வேறு ஒருவருக்கு வழங்கிவிட்டார். இதனால் மிகவும் அவதியுற்று வரு கிறோம். இதுகுறித்து சம்பந்தப் பட்ட அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும், எந்தவித நடவடிக்கை யும் இல்லை. கடந்த சில மாதங் களுக்கு முன்பு வருவாய் கோட் டாட்சியர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. மூன்று மாதத்தில் தங்களது நிலங்களை மீட்டு தரப்படும் என கோட்டாட் சியர் தெரிவித்தார். ஆனால், இது வரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, எங்களுக்கு நிலத்தை மீட்டுத்தந்து நிலத்தை ஆக்கிர மித்த, அதிமுக நிர்வாகி மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.