அவிநாசி, பிப்.8- திருமுருகன்பூண்டி நகராட்சி 10 ஆவது வார்டு அதிமுக அவைத்தலை வர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். திருமுருகன்பூண்டி நகராட்சி 10 வது வார்டு அதிமுகவின் அவைத் தலைவராக இருப்பவர் மணி என் ்கிற சுப்பிரமணியன். இவரது மகன் கலைவாணன். இவர் 10 வது வார்டில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்த லில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அதிமுக தலைமையானது அப்பகுதியில் யாருக்கும் போட்டியிட அனுமதியளிக் காமல் மறைமுகமாக பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து பணியாற்ற அக் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் கடும் அதிருப்திக்குள் ளான மணி அதிமுகவில் இருந்து விலகி, திமுகவின் திருமுருகன்பூண்டி நகர துணை செயலாளர் மூர்த்தி தலைமையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். மேலும், இவருடன் அதேபகுதியை சேர்ந்த அதிமுக முக்கிய பிரமுகர்கள், ஆதரவாளர்கள் பலரும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவ்வாறு அதிமுகவின் நிர்வாகிகள், பிரமுகர்கள் உள்ளிட்டோர் அதிருப்தி யடைந்து அக்கட்சியிலிருந்து விலகி யது அதிமுகவினரிடையே பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.