districts

img

சாலை பணி: அதிமுக முக்கியத்துவம் அளிக்கவில்லை

கோவை, மார்ச் 25- கடந்த அதிமுக ஆட்சியில்  சாலை பணிகளுக்கு முக்கியத்து வம் அளிக்கப்படவில்லை. தற் போது தமிழக முதல்வர் சாலை பணி களுக்கு முக்கியத்துவம் அளித்து  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தால், அனைத்து சாலைகளும் சீர மைக்கப்பட்டு வருவதாக அமைச் சர் வி.செந்தில்பாலாஜி கோவை யில் தெரிவித்தார். கோவையில் சனியன்று மின் சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை துவக்கி வைத்தார். இதில் 2022-23 தார்சாலை பணிகள், சீர்மிகு நகர திட்டம், பொது நிதிப் பணிகள் என கோவை சிங்காநல் லூர், தெற்கு, வடக்கு, தொண்டாமுத் தூர், கவுண்டம்பாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட் பட்ட பகுதியில் சுமார் 32.78 கோடி  மதிப்பில் பல்வேறு பணிகளை துவக்கி வைத்தார். இதன்பின் செய்தியாளர்களி டம் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறுகையில், கோவை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணி கள் துவக்கி வைக்கப்படுகிறது. குறிப்பாக சாலை பணிகளுக்கான  முதல்வர் மூலம் ஒப்புதல் பெறப் பட்டு டெண்டர் முடிக்கப்பட்டு, பணி கள் துவக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் புதுபிக்கப்படாத தார் சாலைகள் குறித்து பொதுமக்களி டம் இருந்து கோரிக்கை மனுக்கள் வரப்பட்டு முதலமைச்சர் கவனத் திற்கு கொண்டு செல்லப்பட்டு ரூ.200 கோடி சிறப்பு நிதி வழங்கப் பட்டது.  அதனடிப்படையில் சாலை பணிகள் மட்டும் ஏறத்தாழ 70 சத விகித சாலை பணிகள் நிறைவு பெற் றுள்ளது. தற்போது புதிய சாலை பணிகளும் துவக்கி வைக்கப்பட் டுள்ளது.  இந்த குறுகிய காலத்தில்  121 கிமீ க்கு 223 கோடி ரூபாயை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

இது கோவை மாநகராட்சியில் வர லாற்று சிறப்பு மிக்க ஒன்றாகும். இடையர்ப்பாளையம் - தடாகம் சாலைப்பணிகள் பாதி முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க கூறப்பட்டுள்ளது  எனவே, கூடிய விரைவில் அப்ப ணிகள் முடிக்கப்படும். மெட்ரோ பணிகள் டிபிஆர் இறுதி செய்யப் பட்டு விரைவில் பணிகள் துவங் கும். கோவையின் மீது அக்கறை  கொண்டு செம்மொழி பூங்கா அறி விப்பு, எழில்மிகு கோவை போன்ற  மிக சிறப்பான திட்டங்களுக்கு முதல்வர் நிதியை ஒதுக்கீடு செய்து தருகிறார். கோவையில் 5 ஆண்டு களுக்கும் மேலான சாலைகள்தான் பழுதடைந்து உள்ளது. சாலை பணி களுக்கு கடந்த காலங்களில் அதி முக அரசு முக்கியத்துவம் அளிக்கப் படவில்லை, அதே போல பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளும் புது பிக்கப்படாமல் இருந்தது. இதனை யெல்லம் கவனத்தில் கொண்டு தான் பணிகள் நடைபெற்று வரு கின்றன, என்றார். முன்னதாக, கோவை மாநக ரத்தின் பல்வேறு திட்டப்பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் வி.செந் தில்பாலாஜி துவக்கி வைத்தார். இந் நிகழ்வுகளில், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி. லீலா அலெக்ஸ் உள்ளிட்ட அதிகாரி கள் உடனிருந்தனர்.

;