திருப்பூர், ஜூன் 29 - திருப்பூர் மாவட்டத்தில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு கையகப் படுத்தும் நிலங்களில் இழப்பீடு வழங்கு வதற்கு தென்னை மரங்கள் கணக்கெ டுக்கப்பட்டபோது மதிப்பை குறைத்து வேளாண்மை துறையினர் வகைப் படுத்தியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தேனி மாவட்டம், தெப்பம்பட்டி என்ற கிராமத்திலிருந்து உடுமலை வட்டம், மைவாடி வரை 400 கிலோ வாட் மின்சாரத்தை கொண்டு செல்லும் மின் வடம் அமைக்கிறது. இந்த வழித்தடத்தில் பல்வேறு கிராமங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக விவசாய விளைநிலங்கள் கையகப் படுத்தப்படுகிறது. இதில் மடத்துக்குளம் வட்டம் மற்றும் உடுமலை வட்டத்தில் பல கிரா மங்களில் தென்னை சாகுபடி செய் யப்பட்டுள்ள விவசாய நிலங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த நிலங்களை கையகப்படுத்தும் போது, அங்குள்ள தென்னை மரங்களை கணக்கெடுத்து அதற்குரிய இழப்பீட்டையும் மின் பகிர் மான கழகம் வழங்கும்.
இதற்காக திருப்பூர் மாவட்ட வேளாண்மை துறை மூலமாக தென்னை மரங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் மூன்று வரு டங்கள் வரை வயதுள்ள மரங்களுக்கு ரூபாய் பத்தாயிரம், ஐந்தாண்டு மற்றும் அதற்கு மேல் உள்ள தென்னை மரங் களுக்கு ரூபாய் 30 ஆயிரம் வீதமும் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மடத்துக்குளம், உடுமலை வட்டங் களில் வேளாண் துறையினர் தென்னை மரங்களை கணக்கெடுத்து வயது வாரி யாக வகைப்படுத்திய போது, ஐந்து ஆண்டுகள் ஆன தென்னை மரங்களை மூன்று வயது உடையவை என குறைத்து வகைப்படுத்தி உள்ளனர். பாரம்பரிய வகை தென்னை மரங் களை விட, உயர்ரக ஒட்டு தென்னை மரங்கள் விரைவாக வளர்ந்து விடும். பாரம்பரிய மரங்கள் ஐந்தாண்டுகளில் வளரும் உயரத்தை உயர் ரகத் தென்னை மரங்கள் மூன்றாண்டுகளில் எட்டிவிடும். எனவே பாரம்பரிய ரகம், உயர் ரகம் இரண்டையும் பிரித்து அவற்றின் வயதை கணக்கிட்டு இருக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறி னர். இவ்வாறு ரகத்தை கணக்கில் கொள்ளாமல் 200 தென்னை மரங்கள் வரை வயது, மதிப்பை குறைத்து வகைப்படுத்தி இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். அதாவது ரூபாய் 30 ஆயிரம் இழப் பீடு தரவேண்டிய மரங்களை, ரூபாய் பத்தாயிரம் பெறக்கூடியவையாக மதிப்பை குறைத்துள்ளனர். இதன் மூலம் ரூபாய் 40 லட்சம், விவசாயி களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு தொகை குறைத்து கணக்கிடப்பட் டுள்ளது என்று விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து கடும் அதிருப்தி தெரிவித் தனர். இந்த விவரம் வேளாண்மை துறை கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. வேளாண்மை துறை இணை இயக்குநர் இது குறித்து கூறுகையில், தென்னை மரங்களின் மதிப்பை குறைத்து வகைப்படுத்திய விவகா ரத்தில் மீண்டும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் துல்லியமாக கணக்கெ டுத்து, வகைப்படுத்தும் பணி நடை பெறும் என்று தெரிவித்துள்ளார்.