திருப்பூர், ஜூலை 20 - நடுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி யில் சுகாதார சீர்கேட்டை களையக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டி ஊராட்சி, நித்திய ஜீவபுரம் பகுதியில் வீடுகளிலி ருந்து வெளியேறும் கழிவுநீர் காங்கிரீட் சாலையில் செல்கிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. ஆகவே வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை உறிஞ்சு குழி அமைத்து செலுத்த வேண்டும் என பொது மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் சுகாதார சீர்கேட்டை சரி செய்ய நடுப்பட்டி ஊராட்சி நிர்வாகம் உரிய ஏற்பாடு செய்யாததால், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், நடுப்பட்டி கிளை சார்பில் வியாழனன்று ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்தி ருப்பு போராட்டம் நடைபெறும் என்று அறி விக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வியாழனன்று காலை 11 மணியளவில் நித்தியஜீவபுரம் பொதுமக்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது ஊத்துக்குளி காவல்துறை ஆய்வாளர், ஊத்துக்குளி ஊராட்சி ஒன் றிய ஆணையாளர் (கிராம ஊராட்சி), நடுப் பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வார காலத்திற்கு உள்ளாக கழிவுநீர் உறிஞ்சுகுழி அமைக்காத வீடுகளுக்கு உறிஞ் சுகுழி அமைப்பு ஏற்படுத்தி சாக்கடை கழி வுநீர் சாலையில் செல்வதை தடுத்து நிறுத்தி சுகாதாரம் காக்கப்படும் என உறுதிய ளித்தனர். இதையடுத்துப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத் தாலுக்கா தலைவர் க.பிர காஷ் தலைமை வகித்தார். இந்த போராட்டத் தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்த சாமி, விதொச ஒன்றிய தலைவர் ஆர்.மணி யன், மார்க்சிஸ்ட் கட்சியின் நடுப்பட்டி கிளை செயலாளர் மு.பழனிசாமி உள்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.