districts

img

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல்

நாமக்கல், மார்ச் 9- குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு பள்ளி பாளையம் நகராட்சி நிர்வாகம் அறிவு றுத்தியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட் டம், பள்ளிபாளையம் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும்,  காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து மிகவும் குறைந்துள்ளதால், பொதுமக்க ளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிரமம் உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண் டும். மேலும், சட்ட விரோதமாக காவிரி ஆற்றில் இருந்து தனிப்பட்ட தேவை களுக்காக மோட்டார் மூலமாகவோ அல்லது வேறு விதத்திலோ காவிரி ஆற்று நீரை சட்ட விரோதமாக உறிஞ் சும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.  தற்போது, குடிநீர் சேவையை சமா ளிக்கும் பொருட்டு பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுக்கும் பணி யில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வரு கிறது.