உதகை, பிப்.12- கொல்லிமலை பகுதியில் இயங்கி வரும் தனியார் கேரட் சுத்திக ரிப்பு நிலையத்தில் இருந்து ரசாயன கலவை மூலம் கலப்படம் செய்யப் பட்ட கேரட்டுகளை விற்பனைக்கு கொண்டு செல்ல இருந்த லாரி விவ சாயிகள் சிறைப்பிடித்தனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள கொல்லிமலை பகுதி யில் தனியார் கேரட் சுத்திகரிக்கும் மையம் இயங்கி வருகிறது. மாலூர் பகுதியிலிருந்து தரம் குறைவான கேரட்டுகள் இங்கு கொண்டு வரப் பட்டு, ரசாயன கலவை மூலம் சுத்தி கரித்து உதகை கேரட்டுகளுடன் கலப் படம் செய்து லாரியில் ஏற்றப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்றது. இதை யறிந்த நீலகிரி மாவட்ட உருளைக் கிழங்கு மற்றும் மலை காய்கறி விவ சாய சங்கத்தினர், கேரட் ஏற்றிக் கொண்டிருந்த லாரியை சிறைபிடித் தும், சுத்திகரிப்பு நிலையத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை யடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் கூறு கையில், நீலகிரி மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு, குறு வியாபாரிகள் பல ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் கேரட் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். கேரட் சாகுபடியை நம்பி இங்குள்ள விவ சாயிகள் தங்கள் வாழ்வாதாரங் களை நடத்தி வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கேரட் இடைத் தரகர்கள் சிலர் அதிக லாப நோக்கத் திற்காக வெளிமாநில பகுதியான மாலூர் பகுதியிலிருந்து குறைந்த விலைக்கு கேரட்டுகளை நீலகிரியில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்க ளுக்கு கொண்டு வந்து, ரசாயன மூலம் சுத்திகரிப்பு செய்து நீலகிரி யில் விளைவிக்கப்படும் கேரட்டுக ளுடன் கலப்படம் செய்து விற்பனை ச ெய்து வருகின்றனர். இதனை உண்ப தால் உடல்நிலை பாதிக்கப் படுவதோடு மட்டுமல்லாமல் நீலகிரி யில் விளைவிக்கப்படும் கேரட்டிற்கு கிடைக்கும் புவிசார் குறியீடு கிடைக்கப்பெறாமல் உள்ளூர் விவ சாயிகளின் நிலை பாதிக்கப்படும் வகையில் செயல்படுகின்றனர். இத னால் வெளிமாநில கேரட்டுகள் கலப் படம் செய்யப்படுவதை தடுக்க வேளாண்துறை அதிகாரிகள் மற் றும் மாவட்ட நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும், என்ற னர்.